ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்று சாதனை
பெரம்பலூர்: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீ ராம கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் மாணவர் எஸ்.ஆகாஷ் 497 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், கே.எஸ். ரிஷிக் குமார் 495 மதிப்பெண்கள் பெற்று 2 ஆம் இடத்தையும், ஜே.ஜாய்ஸ் ஸ்டெல்லாமேரி 493 மதிப்பெண்கள் பெற்று 3 ஆம் இடத் தையும், மாணவர்கள் எஸ்.சச்சின், எஸ். சக்திவேல் மற்றும் மாணவி ஆர்.கெள ஷிகா 492 மதிப்பெண்கள் பெற்று 4 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். இவர்களில் அறிவியல் பாடத்தில் 18 மாணவர்கள், சமூக அறிவியலில் 33 மாண வர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ள னர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாண வர்களுக்கு, கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ம.சிவசுப்பிரமணியம் பரிசுகள் வழங்கி பாராட்டி கௌரவித்தார். செயலா ளர் எம்.எஸ். விவேகானந்தன், முதல்வர்கள் எஸ்.கலைச்செல்வி, பி.கோமதி மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.