மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டம்
முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஏப்.30 - மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக் கான தமிழ்நாடு மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தினை புதன்கிழமை (ஏப்.30) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டார். மின்னணுவியல் துறையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழ்நாடு ஏற்கெனவே அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. மின்னணுவியல் துறையில், மேலும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவித்திடவும், குறைக்கடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்திட வும், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கை 2024- ஐ அறிமுகப்படுத்தியது. இக்கொள்கை மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ வழிவகுத்துள்ளது நிலையில், மின்னணு வியல் உற்பத்தி சூழலமைப்பை மேலும் மேம்படுத் தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி சிறப்புத் திட்டத்தை வெளியிட்டார். ஒன்றிய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மின்னணு உபகரணங்கள் உற்பத்தி திட்டம் என்ற திட்டத் தின்கீழ் பயனடையும் நிறுவனங்களை மாநிலத் திற்கு ஈர்த்திடும் வகையில், ஒன்றிய அரசுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மானியத்திற்கு இணையாக, தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்க இந்த திட்டம் வழிவகை செய்யும்.