மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் மே 21-க்கு ஒத்திவைப்பு
தஞ்சாவூர், மே 18- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, தமிழ அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதுநாள் வரை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 3 கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. இதில் 20.05.2025 அன்று கும்பகோணம் கோட்டம் ஆடுதுறை வீர சோழன் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் நிர்வாக காரணங்களினால் 21.05.2025 அன்று நடைபெற உள்ளது. இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன், சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொள்ளலாம். தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு(UDID) விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இலவச கண் பரிசோதனை முகாம்
பாபநாசம், மே 18- கும்பகோணம் ரோட்டரி சங்கம், தங்க மயில் ஜீவல்லரி லிட், சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட், செளக்கத்துல் இஸ்லாம் பள்ளிகள், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த வழுத்தூர் சௌக்கத்துல் இஸ்லாம் ஆரம்பப் பள்ளியில் நடந்த முகாமில் டாக்டர்கள் மகேஸ்வரன், பிரணவ் குப்தா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் 227 பேரிடம் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் கண் புரை முற்றிய நிலையில் இருந்த 40 பேருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, லென்ஸ் பொருத்தி பார்வையளிக்க மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் கண்ணில் பார்வை குறைபாடு உடைய 45 பேருக்கு கண்ணாடி அணிய பரிந்துரைக்கப்பட்டது. கும்பகோணம் ரோட்டரி கிளப் தலைவர் இசையாசு, ரோட்டரி உதவி ஆளுநர் மணிமாறன், சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் செயலாளர் கலியமூர்த்தி, தங்கமயில் ஜீவல்லரி லிட் முதன்மை இயக்கு அலுவலர் விஸ்வநாராயண், கும்பகோணம் கூட்டுறவு துணை பதிவாளர் பாலமுருகன் உட்பட வழுத்தூர் ஜமாத்தார்கள் பங்கேற்றனர்.
கிணற்றுக்குள் கார் பாய்ந்து பலியானவர்கள் உடல் ஒப்படைப்பு
திருநெல்வேலி, மே 18- சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்த விபத்தில் பலியான 5 பேரின் உடல்கள் சனிக்கிழமையன்று இரவு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. ஞாயிறன்று காலை உடற்கூராய்வுக்கு பிறகு 5 பேரில் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுன. உடன்குடி அருகே ஆலய பிரதிஷ்டை விழாவுக்கு வந்தவர்கள் விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: ஓட்டுநர் கைது
தஞ்சாவூர், மே18- தஞ்சாவூரில் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த வாகன ஓட்டுநரை காவல் துறை யினர் கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே விஷ்ணம்பேட்டை பவனமங்கலத்தைச் சேர்ந்தவர் சாமியப்பா மகன் சசிகுமார் (24). லாரி ஓட்டுநரான இவரி டம் தஞ்சாவூர் வடக்கு மானோஜிபட்டியைச் சேர்ந்த ஆர்.மரிய ஜெபராஜ் (50) வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2022 ஆம் ஆண்டில் ரூ.4 லட்சமும், பாஸ்போர்ட்டும் வாங்கினார். ஆனால், வெளி நாட்டு வேலை வாங்கித் தராத மரிய ஜெப ராஜிடம் ரூ.4 லட்சத்தைத் திரும்பத் தரு மாறு சசிகுமார் கூறினார். இதையடுத்து, சசிகுமாரிடம் மரிய ஜெபராஜ் ரூ.1 லட்சத்தை வழங்கினார். ஆனால், மீதி பணத்தையும், பாஸ்போர்ட்டை யும் மரிய ஜெபராஜ் தரவில்லை. இதனி டையே சசிகுமாரிடம், மரிய ஜெபராஜ் வழங்கிய ரூ.3 லட்சத்துக்கான காசோலை யும் வங்கியில் பணம் இல்லாததால் திரும்ப வந்துவிட்டது. இதுகுறித்து, மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் சசிகுமார் புகார் செய்தார். இதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து மரிய ஜெபராஜை கைது செய்தனர்.