செப்டம்பர் மாதம், சென்னை நகரில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்று, புதிய சாதனையைப் படைத்தவர் தென்காசி மாவட்டம், கல்லூத்தைச் சேர்ந்த அபிநயா. அவர் முந்தைய சாதனையான 11.92 வினாடிகளை முறியடித்து, 11.77 வினாடியில் ஓடி, சாதனை படைத்தார். அபிநயாவின் தந்தை ராஜராஜன் விவசாயி, தாயார் சங்கவி குடும்பத் தலைவியாக வழிநடத்தி வருகிறார்.ஆனால் விளையாட்டுப் பயிற்சிக்குத் தேவையான வசதிகள் அங்கு இல்லை. எனவே, அபிநயா மற்றும் அவரது குடும்பம் திருநெல்வேலியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.