போலீஸ் எஸ்.பி. நேரில் வாழ்த்து தூத்துக்குடி,பிப்.18- தூத்துக்குடி மாவட்டம், முறப்ப நாடு கிராம நிர்வாக அலுவலராக பணி யாற்றிய லூர்து பிரான்சிஸ் சேவியர் கடந்த 25.04.2023 அன்று கொலை செய்யப்பட்டார். இவரது மகன் மார்ஷல் ஏசுவடி யான் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சூசைபாண்டியாபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று, மார்ஷல் ஏசுவடியானுக்கு சால்வை அணிவித்து, அவரது பணி சிறக்கவும், மென்மேலும் வாழ்க்கை யில் பல வெற்றிகளைப் பெற வேண்டு மென பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி னார். அவருடன் தூத்துக்குடி பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் வாக் கரே அக்ஷய் அனில் மற்றும் தூத்துக் குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் ஆகி யோரும் வாழ்த்தினர்.