tamilnadu

img

கனிமத்துறை அதிகாரியின் கெடுபிடியால் பாதிப்புக்குள்ளாகும் சிறு, குறு விவசாயிகள்

தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை சேமித்து, பாதுகாப்பதற்கும் அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த பட்டா  நிலங்களில் பண்ணை குட்டை அமைப்பதற்கும், பல ஆண்டுகளாக தூர்ந்து போன குளங்களை தூர்வாரி விவசாயிகள் பொதுமக்கள் பயன் படுத்திக் கொள்ள சிறப்பு ஆணை பிறப்பித்தது. ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது, திருவாரூர் கனிமம் மற்றும் புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குநர் புவனேஸ்வரி, சிறு, குறு விவசாயிகளை தொந்தரவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குற்றச்சாட்டுகள்

1.     குளம் தூர்வாரும் இடங்களில் ஆய்வு என்ற பெயரில் விவசாயிகளை தொந்தரவு செய்தல்.
2. எஸ்.ஆர்.குரூப் என்ற தனியார் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, அவர்களிடம் அனுமதி வாங்கினீர்களா என கேள்வி எழுப்புதல்.
3.அனுமதி இல்லை எனில் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டுதல்.
4. எஸ்.ஆர். குரூப் நிறுவனத்தின் வாகனங்களை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளுதல்.
5. லஞ்ச நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காத நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தல், ஆர்சி புத்தகங்களை முடக்குதல், பொய் வழக்குகள் பதிவு செய்தல்.

விளைவுகள்

 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
- ஒரு விவசாயி தீக்குளிக்க முயன்றார், தற்போது சிறையில் உள்ளார்.
- எஸ்.ஆர்.குரூப் நிறுவனம் பல இடங்களில் மண்ணை வெட்டி கடத்துவதாகவும் குற்றச்சாட்டு.
 

கோரிக்கைகள்

1.அதிகாரியின் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகள் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும்.
2. அரசு அதிகாரிகள் லஞ்சம் மற்றும் மணல்மாஃபியா போன்ற கும்பல்களின் கமிஷன் களில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக செயல்பட வேண்டும்.விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆரூரான்