tamilnadu

img

மருத்துவமனைகளில் பாலியல் புகார் குழுக்களை அமைக்க வேண்டும்

மருத்துவமனைகளில் பாலியல் புகார் குழுக்களை அமைக்க வேண்டும்

செவிலியர்கள் மாநாட்டில் உ.வாசுகி பேச்சு

சென்னை, ஏப். 26 - மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலை யங்களில் பாலியல் புகார் குழுக்களை அமைக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.வாசுகி வலியுறுத்தி உள்ளார். ஏமாற்றும் அரசு தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் 3ஆவது மாநில மாநாடு சனிக்கிழமையன்று (ஏப்.20) எழும்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில்,“தமிழக அரசின் பொரு ளாதார ஆய்வறிக்கையில், 2021ஆம் ஆண்டிலிருந்து 8 சதவீதத்திற்கு மேல் பொருளாதார வளர்ச்சி உள்ளது. தனி நபர் வருவாய் அதிகரித்துள்ளது. நீடித்த நிலையான வளர்ச்சி நிலவுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசும் தமி ழகத்தில் 9 சதவீத வளர்ச்சி உள்ளதாக தெரிவிக்கிறது. ஆனால், அரசு ஊழி யர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில அரசு மறுக்கிறது. ஜாக்டோ-ஜியோ போராடும் போதெல்லாம் அரசு நிதிச் சுமையில் உள்ளது என்று ஏமாற்றுகிறது. எனவே, ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் கோரிக்கைகளை வென்றெடுப்போம்” என்றார். மக்களிடம் செல்வோம் தொடர்ந்து மாநாட்டை வாழ்த்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி பேசுகையில்,“நோயாளிகளின் அளவிற்கேற்ப செவிலியர்களின் எண் ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது நோயாளிகளின் நலன் காக்கும் கோரிக்கை. நமது கோரிக்கைகளுக்காக போராடுகிற அதே நேரத்தில், இவற்றை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். ஊழி யர்களும், மக்களும் ஒன்றுபட்டு நிற்கும் போது அரசு அடிபணியும்” என கூறினார். மகப்பேறு விடுப்பு நமதுரிமை மகப்பேறு விடுப்பு அரசின் கருணை சார்ந்தது அல்ல. அது நமது உரிமை ; குழந் தைகளின் உரிமை, சமூகத்தின் எதிர்கால வளர்ச்சி சார்ந்தது. எனவே, மகப்பேறு விடுப்புக்காக போராடுவோம். அதை அரசு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தி அவர், “மருத்துவத்துறை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். “சமூகத்தில் ஜனநாயக அமைப்புகளின் பல கட்ட போராட்டங்களுக்கு பணியிடங்க ளில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாது காக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி அனைத்து இடங்களிலும் புகார் குழு கட்டாயம் அமைக்க வேண்டும். அமைக்காவிடில் 50 ஆயிரம் ரூபாய் அபரா தம் விதிக்கப்படும். இதன்படி மருத்துவத் துறைக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரியவில்லை. மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாலியல் புகார் குழுக்களை அமைக்க அமைச்சரிடம் மாதர் சங்கம் வலியுறுத்தும்” என்றார். “நமது ஒற்றுமை போராட்டக்களத்தில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும்; நேரத்திலும் இருக்க வேண்டும். வகுப்புவாத வெறுப்பு அரசியலை புறக்கணிக்க வேண்டும். வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அரசியல் ரீதியாகவும் முடிவெடுக்க வேண்டும்” என்றும் கூறினார். மாநிலத் தலைவர் கு.சசிகலா தலை மையில் நடைபெற்ற இந்த பிரதிநிதிகள் மாநாட்டில் இணைச் செயலாளர் சி.க.சுஜாதா அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். வரவேற்புக்குழுச் செயலாளர் பி.மீனாட்சி வரவேற்றார். பொதுச் செயலா ளர் நே.சுபின் வேலை அறிக்கையையும், பொருளாளர் இ.மைக்கேல் லில்லி புஷ்பம் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர்.