tamilnadu

img

செந்தொண்டர் அணிவகுப்பு : சிவந்தது கொல்லம் சிபிஎம் கேரள மாநிலச் செயலாளராக எம்.வி.கோவிந்தன் தேர்வு

செந்தொண்டர் அணிவகுப்பு : சிவந்தது கொல்லம் சிபிஎம் கேரள மாநிலச் செயலாளராக எம்.வி.கோவிந்தன் தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு மார்ச் 6 முதல் 9 வரை நான்கு நாட்கள் கொல்லத்தில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் ஒருங்கி ணைப்பாளருமான பிரகாஷ் காரத் மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் முன்வைத்த வேலை அறிக்கை மீதும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பினராயி விஜயன் முன் வைத்த “புதிய கேரளாவை வழிநடத்த புதிய வழிகள்” என்கிற அரசை வழி நடத்து வதற்கான கொள்கை ஆவணத்தின் மீதும் பிரதிநிதிகள் விவாதம் நடத்தினர். இந்த அறிக்கைகள் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. புதிய மாநிலக்குழு மாநாட்டின் நிறைவாக,  மார்ச் 9 ஞாயிறன்று புதிய மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில செயலாளராக எம்.வி. கோவிந்தன் தேர்ந்தெடுக்கப் பட்டார். மாநிலக்குழு உறுப்பினர்களாக 89 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 17  பேர் புது முகங்களாவர். மாநில செயற்குழு  உறுப்பினர்களாக 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்கள் பினராயி விஜயன், எம்.வி. கோவிந்தன், இ.பி. ஜெயராஜன், கே.கே.  ஷைலஜா, டி.எம். தாமஸ் ஐசக், டி.பி. ராம கிருஷ்ணன், கே.என். பாலகோபால்,