tamilnadu

img

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல்

விழுப்புரம், ஜூன் 7- விழுப்புரம் மாவட்டத்தில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய ஒரு பிரிவு மக்கள் எதிர்ப்பு தெரி வித்து வந்த நிலையில் அந்த கோவி லுக்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்த னர். விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. பட்டி யலின மக்கள், இந்த கோயிலுக்குள் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடு கள் காலம், காலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. நவீனமயமான இந்த காலத்திலும் கூட கோயிலுக்குள் பட்டியலின மக்கள் நுழையக் கூடாது என்பதில் ஒரு பகுதியில் வசித்து வரும் ஒரு சமூ தாயத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்தநிலையில், கடந்த சில தினங்க ளுக்கு முன்பு திருவிழா நடைபெற்றுள் ளது. அப்போது அந்தக் கோயிலுக் குள் அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். அப்போது அந்த  மக்களை கோயிலுக்குள் அனுமதிக் காமல் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தி னர். இதில் பட்டியலினத்தை சேர்ந்த  சிலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து இரு சமூக மக்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்து திரௌபதி அம்மன்  கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்து செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட் சியர் ஆகியோர் தலைமையில் 8  முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், கோயிலுக்குள் பட்டியலின மக்கள் நுழையக் கூடாது என்பதில் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் உறுதியாக இருந்த னர். இதனால், சமரச பேச்சுவார்த் தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. தலித் மக்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்றால் ஜூன் 7ஆம் தேதி போராட் டத்தை நடத்துவோம் என்று சிபிஎம்  தலைமையிலான அனைத்து கட்சித் தலைவர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், மேல்பாதி கிராமத்தில் இரு சமுதாய மக்களி டையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி யதால் சர்ச்சைக்குள்ளான திரௌபதி அம்மன் கோயிலை புதனன்று (ஜூன் 7) பூட்டி சீல் வைக்க விழுப் புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந் திரன் உத்தரவிட்டார். 

மேல்பாதி கிராமம் முழுவதையும் காவல்துறையினர் தங்கள் கட்டு பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள னர். பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய திரௌபதி அம்மன்  கோயிலை சுற்றிலும் தடுப்பு வேலி களையும் அமைத்து போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கலவர தடுப்பு வாகனங்க ளுடன் அதிரடிப்படைகாவலர்களும்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டியிலிருந்து கோலியனூர் கூட்டுச்சாலை வரைக் கும் கும்பகோணம்-தேசிய நெடுஞ் சாலையில் முழுவதுமாக போக்கு வரத்தை தடை செய்தனர். அதே போல், சென்னையிலிருந்து விக்கிர வாண்டி வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் முண்டியம்பாக்கம், விழுப்புரம் வழியாக திருப்பி விடப்பட்டது. மேலும் தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து கோலியனூர் கூட்ரோடு வழியாக வந்த வாகனங்கள் விழுப்புரம், முண்டியம்பாக்கம் வழியாக திருப்பி விடப்பட்டது .  இந்த சூழ்நிலையில், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி போராட்டம் நடத்தியதுடன் சிலர் தங்கள் கையி லிருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பட்டியலின மக்களும் போராட்டம் நடத்தியதால் யாரும் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மேல்பாதி கிராமத்தில் 2,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வடக்கு  மண்டல ஐஜி தலைமையில் குவிக்கப் பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள் ளது.