tamilnadu

img

‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை நீட்டிப்பு

சென்னை, ஜூன் 12- தமிழ்நாட்டின் 4 மாவட்ட கடற்கரை களுக்கான கள்ளக்கடல் நிகழ்வு வியா ழக்கிழமை (ஜூன் 13) இரவு 11.30 மணி  வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்  டங்களுக்கான ‘கள்ளக் கடல் நிகழ்வு’  எச்சரிக்கை ஜூன் 13 இரவு வரை தொட ரும் எனவும் 4 மாவட்டங்களில் கடலோர  பகுதிகளில் கடல் அலை அதிக உயரம் எழும்பும் வாய்ப்பு உள்ளது எனவும் இந்  திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்  துள்ளது. குமரியில் 2.5 மீ., இராமநாத புரத்தில் 2.8 மீ., நெல்லை, தூத்துக்குடி யில் 2.6 மீ. உயரம் வரை கடல் அலை  எழும்பக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்  மாவட்டத்திலும் லேசான கடல் எழுச்சி  இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.