சவளக்காரன் அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை
அகில இந்திய கால்பந்து போட்டிகள்
மன்னார்குடி, ஏப்.23 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சவளக்காரன் கிராமத்தில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறையின் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகள் கே. ஆஷிகா, என்.இனியா, சி.மாதுஷா, வி.நிஷாந்தி, பி.கீர்த்திகா, வி.கோதாவரி ஆகிய 6 மாணவிகள் மணிப்பூர் மாநிலம் இம்பாலாவில் நடைபெற்ற இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பின் (SGFI) அகில இந்திய கால்பந்து போட்டிகளில் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். 20 மாணவிகள் அடங்கிய தமிழ்நாட்டு குழுவினர் கடந்த ஏப்.6 முதல் 10 வரை விருது நகரில் போட்டிகளின் முன்பருவ ஆயத்த பயிற்சிக்காக முகாமிட்டிருந்தனர். மாநிலம் முழுவதிலிருந்தும் வந்திருந்த இந்த 20 பேரில், சவளக்காரன் பள்ளியிலிருந்து மட்டும் ஆறு மாணவிகள் தகுதிபெற்று கலந்து கொண்டனர். ஏப்.15 அன்று இம்பாலில் நடந்த போட்டி களில் தமிழ்நாடு அணி, ஒடிசா அணி யோடு விளையாடி 5 கோல்கள் அடித்து வென்றது. ஏப்.16 அன்று தில்லி அணியோடு மோதி 6.0 வித்தியாசத்தில் வென்றது. அடுத்த தாக உத்தரப்பிரதேச அணியோடு விளை யாடி 1-0 என்ற வித்தியாசத்தில் தமிழக அணி வென்றது. அரையிறுதிக்கு முன்னேறி, மூன்றாம் இடத்திற்காக மேற்குவங்க அணி யுடன் விளையாடியதில் 1-0 கோல்கணக்கில் தமிழ்நாடு அணி வென்றது. மாணவியருக்கான அகில இந்திய தொட ரில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் பெற்றது. இந்த அணியில் சவளக்காரன் மாணவிகள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதற்காக, திருவாரூர் மாவட்ட விளை யாட்டு ஆர்வலர்கள், மன்னை கால்பந்து கழக நிர்வாகிகள், கல்வித்துறையினர், ஆசிரி யர்கள்-பெற்றோர்கள், பயிற்றுநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வி.முத்துக்குமார் ஆகி யோர் சாதனை மாணவிகளை பாராட்டினர்.