tamilnadu

ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டிய சரத் பவார்

ஏக்நாத் ஷிண்டேவை பாராட்டிய சரத் பவார்

கண்டனம் தில்லியில் செவ்வாய்க்கிழமை அன்று 98ஆவது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம் மேளன விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு விருது வழங்கினார். மேலும் ஏக் நாத் ஷிண்டேயை பாராட்டி சரத் பவார் பேசினார். இதுதொடர்பாக சரத் பவார் கூறுகையில், “மாநி லத்தின் வளர்ச்சியை மையமாகக் கொண்டும், அரசியல் பிளவுகளை இணைப்பதிலும் ஏக்நாத் ஷிண்டே காட்டிய திறமை மற்றும் அவரது அணுகுமுறை, ஆட்சியை வழி நடத்தும் திறன் அனைத்தும் பாராட் டுக்குரியது” எனக் கூறினார். 

சஞ்சய் ராவத் கடும் எதிர்ப்பு 

ஏக்நாத் ஷிண்டேயை பாராட் டிய சரத் பவாரின் செயலுக்கு சிவ சேனா (உத்தவ்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் ராவத் கூறுகையில்,”சரத் பவார், நீங்கள் ஒரு மூத்த அர சியல்வாதி. நாங்கள் உங்களை மதிக்கிறோம். ஆனால் அமித் ஷாவின் உதவியுடன் சிவசேனா வை பிளவுபடுத்தியது ஷிண்டே தான். அவரைப் பாராட்டுவது பாஜக தலைவரை கவுரவிப்ப தற்கு ஒப்பானது. இதே போல அடுத்த வாரம் தொடங்க திட்ட மிடப்பட்டுள்ள இலக்கியக் கூட்டத் தின் வரவேற்புக் குழுவிற்கு நீங்கள் (சரத் பவார்) தலைமை தாங்கு கிறீர்கள்.

2022ஆம் ஆண்டு மகா ராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான காங்கிரஸ்-சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்ததால், சரத் பவார் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது. அரசியலில் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். மகாராஷ்டிரத்தின் எதிரி யாக நாங்கள் கருதும் ஒருவருக்கு, இதுபோன்ற மரியாதை வழங்கு வது மகாராஷ்டிராவின் பெரு மைக்கு ஒரு அதிர்ச்சி. சரத் பவார் வித்தியாசமாக நினைத்திருக்க வேண்டும். ஆனால் இத்தகைய அர சியல் மகாராஷ்டிர மக்களுக்குப் பிடிக்க வாய்ப்பில்லை” என அவர் கூறினார்.