ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளின் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள், மருத்துவ உதவிகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினர். அப்போது தமிழ்நாடு, ஒடிசா உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.