தோழர். பிஎன். தங்கராசு குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியளிப்பு
திருத்துறைப்பூண்டி, மே 17- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு கட்சி பொறுப்புகளில் இருந்து பணியாற்றிய பிஎன். தங்கராசு, இறந்த பிறகு அவரது மனைவி ஜானகி, மகன் சுபாஷ்சந்திரபோஸ், மருமகள் ஜெயா ஆகியோரின் குடும்ப வாழ்வாதாரத்திற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. நிகழ்வில், பவானி மாவட்ட குழு உறுப்பினர் தலைமை தாங்கினார். வி.தன்ஜினாத், எஸ்.தனிக்கொடி, செல்வராஜ், வீரமணி ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் ஐவி. நாகராஜன் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜோதிபாசு, தமிழ்மணி, கேஜி. ரகுராமன், நகர்மன்றத் துணைத் தலைவர் எம். ஜெயபிரகாஷ், ஒன்றியச் செயலாளர் டிவி காரல் மார்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். சாமிநாதன், கே.கோபு, ஏகே. செல்வம், தமிழ்மணி, தண்டபாணி, கோதாவரி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே. மதியழகன் சி.வீரசேகரன், வீராசாமி, சுந்தரேசன் மற்றும் கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.