tamilnadu

img

உச்சபட்டி  இலங்கைத் தமிழர்களுக்கு ரூ 1.50 லட்சம் மதிப்பிலான காய்கறி வழங்கல்

மதுரை:
மதுரை உச்சப்பட்டி யில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில்  451  குடும்பங்கள் வசித்துவருகின்றன. ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வேலை இழந்து  கஷ்டத்தில் இருந்துவந்தனர். இந்தத் தகவல் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கவனத்திற்கு சென்றது.

இதையடுத்து அவர், சம்மந்தப்பட்ட அதிகாரியை தொடர்புகொண்டதையடுத்து இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக உதவித்தொகையும், ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட சு.வெங்கடேசன்  மதுரை சென்டரல் மார்க்கெட் காய்கறி  மற்றும் அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கத்தலைவர் மனுவேல் ஜெயராஜிடம் இது குறித்துப்பேசினார். சுமார் ஒன்றரை லட்சம் பெறுமானமுள்ள காய்கறிகளை அவர் ஞாயிறன்று காலை வழங்கினார். காய்கறிகளை பெற்றுக்கொண்ட சு.வெங்கடேசன் முகாமிற்கு சென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மதுரை மாவட்டத் தலைவர் இராஜேந்திரன், வா நண்பா அமைப்பினர் உதவியுடன் முகாமிலுள்ள அனைவருக்கும் வழங்கினார்.
 

;