tamilnadu

img

தூய்மையான குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்

தூய்மையான குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்

பாபநாசம், மே 6 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த கணபதிஅக்ரஹாரம் அருகே பெருமாள் கோயில் ஊராட்சியைச் சேர்ந்த காளியம்மன் கோயில் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு வரும் குடிநீர் தூய்மையின்றி, குடிக்க தகுதியற்றதாக உள்ளதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கும்பகோணம் - திருவையாறு மெயின் சாலையில் செவ்வாயன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த வருவாய்த் துறையினர், கபிஸ்தலம் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.  இதுகுறித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில், “3 வருடமாக இப்பகுதிக்கு வரும் குடிநீர் கலங்கலாக குடிக்கவே முடியாத நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் வரை மனு அளித்தும் எதுவும் நடக்கவில்லை. அதோடு இப்பகுதியில் உள்ள கோயில் அருகே அரசு புறம்போக்கு இடத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். அதையும் அவரிடம் இருந்து அரசு மீட்க வேண்டும். சுத்தமான தண்ணீரை தர வேண்டும்” என்றனர்.