மனித வாழ்வின் அடிப்படைத் தேவையான உணவுக்கான உரிமை இன்று உலகளவில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. 2024-ம் ஆண்டின் உலக பசி குறியீட்டு அறிக்கை (Global Hunger Index) வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவல்கள் அனைத்து நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக போர் மற்றும் மோதல்கள் நிகழும் பகுதிகளில் இந்த நிலை மோசமாக உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து உலகளவில் பசி மற்றும் பட்டினிச்சாவை ஒழிப்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை என்பது கவலை தரும் செய்தி. இதற்கு முக்கிய காரணம் உலக நாடுகளின் அரசியல் விருப்பமின்மை யும், ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லாமையும் தான்.
காசாவில் உணவு நெருக்கடி
கடும் பட்டினி நிலையில் உள்ளனர். m அக்டோபர் 1-15 காலகட்டத்தில் வடக்கு காசாவிற்கான அனைத்து உதவி வழிகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டன. m கடந்த மாதம் வெறும் 5,000 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களே காசாவை சென்றடைந்துள்ளன. m ஒரு மில்லியன் மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளில் இது 10% மட்டுமே. m உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க முயற்சிக்கும் ஐநா அமைப்பு களின் செயல்பாடுகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளன.
சூடானின் பரிதாப நிலை
25.6 மில்லியன் மக்கள் கடும் பசியை எதிர்கொள்கின்றனர். l நாட்டின் உள்நாட்டுப் போரால் இடம்பெயர்ந்த 97% மக்கள் கடும் பட்டினி நிலையில் உள்ளனர். l அக்டோபர் 2024 நிலவரப்படி, தேவை யான மனிதாபிமான உதவிகளில் 5% மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தியாவின் நிலவரம் m மக்கள்தொகையில் 58% பேர் மட்டுமே ஆரோக்கியமான உணவை வாங்கும் நிலையில் உள்ளனர். m 127 நாடுகளில் இந்தியா 105-வது இடத்தில் உள்ளது. m பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் முக்கிய பங்காற்றினாலும், உணவின் தரம் மற்றும் சத்து பன்முகத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. m குறைந்த ஊதியம், வேலை யின்மை, விவசாய வருமானக் குறைவு போன்றவை உணவுப் பாது காப்பின்மைக்கு காரணமாகின்றன.
பிற நாடுகளின் நிலவரம்
காங்கோ ஜனநாயக குடியரசு, ஹைட்டி, மாலி, சிரியா ஆகிய நாடுகளி லும் கடும் உணவு நெருக்கடி நிலவுகிறது. தீர்வுக்கான வழிகள் 1. நாடுகள் உணவுக்கான அடிப்படை உரிமையை அங்கீகரித்து, அதனை அமல்படுத்த வேண்டும். 2. போர் மண்டலங்களில் மனிதாபிமான உதவிகளுக்கான பாதுகாப்பான வழித் தடங்கள் உருவாக்கப்பட வேண்டும். 3. ஜனநாயக நாடுகள் பிற நாடுகளின் உணவு நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும். 4. உலக உணவுத் திட்டம் போன்ற அமைப்புகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 5. உணவு விநியோக முறைகளில் வெளிப்படைத்தன்மை கடைப் பிடிக்கப்பட வேண்டும்.
ஜனநாயக நாடுகளின் பொறுப்பு
நோபல் விருதுபெற்ற பொருளாதார அறிஞர் டாக்டர் அமர்த்தியா சென்னின் ‘பசியும் பொதுக் கொள்கையும்’ என்ற நூல் சுட்டிக்காட்டும் ஒரு முக்கிய கருத்து என்னவென்றால், ஜனநாயக நாடுகளில் பெரும் பஞ்சங்கள் ஏற்பட்டதில்லை என்பதுதான். எனவே ஜனநாயக நாடுகள் பிற நாடுகளின் உணவு நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும். உணவுக்கான அடிப்படை உரிமை என்பது வெறும் கோட்பாடாக இல்லா மல், அனைத்து மக்களின் வாழ்வுரிமை யாக மாற்றப்பட வேண்டிய தருணம் இது. எந்தக் காரணத்தாலும் மக்களின் உண வுரிமை பறிக்கப்படக் கூடாது என்பதே உலக சமூகத்தின் கடமையாகும். அதற் கான முயற்சிகளை உடனடியாக மேற் கொள்ள வேண்டியது அவசியம். எக்கனாமிக் அண்டு பொலிட்டிக்கல் வீக்லி தலையங்கம் (நவ.9) தமிழில் : ராஜு பாய்