tamilnadu

img

எல்ஐசிப் பங்கு விற்பனையை மறுபரிசீலனை செய்க! பிரதமர் மோடிக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்

எல்ஐசி பங்கு விற்பனை முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென சிபிஎம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், இந்தியாவின் பிரம்மாண்டமான நிதி நிறு வனம், நாளை (செப் 1) 65 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.  கடந்த 64 ஆண்டுகளாக நாட்டின் நிர்மாணப் பணிகளுக்கு எல்.ஐ.சியின் பெரும் பங்களிப்பு மகத்தானது. இரண் டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் துவங்கி, 13- ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் ஆண்டு வரை எல்.ஐ.சியின் மொத்த பங் களிப்பு ரூ. 34 லட்சம் கோடிகளை கடந்துள் ளது. அரசு நிறுவனமான இதன் வெற்றி ஆயுள் காப்பீட்டுத் தொழிலுக்கு மட்டுமின்றி எல்லாத் தொழில் நிறுவனங்களுக்குமே ஓர் சீரிய முன்னுதாரணம் ஆகும்.  1956-ஆம் ஆண்டில் ஐந்து கோடி அரசு முதலீட்டோடு தொடங்கப்பட்ட எல்.ஐ.சி, பின்னர் சட்டத் தேவைகளுக்காக ரூ. 100  கோடிகளாக அதன் மூலதனம் உயர்த்தப் பட்டாலும், எந்தவொரு நேரத்திலும் அரசிட மிருந்து எல்.ஐ.சி கூடுதல் மூலதனத்தை எதிர்பார்த்ததே கிடையாது.

அவ்வளவு சிறிய மூலதன தளத்தில் எல்.ஐ.சியின் சொத்து மதிப்பு 32 லட்சம் கோடிகளாக இன்றைய நாளில் வளர்ந்துள்ளது.  இது எல்.ஐ.சியின் ‘பளிச்சிடும்’ சாதனையாகும். அரசு உத்தரவாதம் இருந்த போதிலும் ஒரு  முறை கூட அதை எல்.ஐ.சி பயன்படுத்தி யது இல்லை.  இந்த மாபெரும் நாட்டின் மூலை முடுக்குக் கெல்லாம் எல்.ஐ.சியின் சிறகுகள் விரிந்துள் ளன. அதன் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகவே இல்லை. உலகம் முழுவது முள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் 42 கோடி பாலிசிகளோடு எல்.ஐ.சி எட்டி யுள்ள உயரம் ஒப்பிட இயலாத ஒன்று. ஆயுள் காப்பீட்டுத் தொழில் என்பது “வாக்குறுதிகளை” பாலிசிதாரர்களுக்கு விற்பது என்பதை தாங்கள் அறிவீர்கள். அத்தகைய விரிந்த பாலிசி தளம் இருக்கும் நிலையில் எல்.ஐ.சி 98 சதவீத உரிமப் பட்டு வாடாவை 2018-19 நிதியாண்டில் எட்டி யுள்ளது. 2019-20 ல், கொரோனா  ஊரடங்கு காலம் கடைசி வாரங்களில் குறுக்கிட்ட போதும், இறப்பு உரிமங்களில் 95 சதவீதத்தை எட்டியுள்ளது.  

வேகமாக வளர்கிற நாடுகளின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு  “உள் நாட்டு  சேமிப்பு” திரட்டலே மிகச் சிறந்த வழிமுறை என்பதை எல்.ஐ.சி நிரூபித்துள்ளது. இந்திய ரயில்வே நிதித் தேவைகளுக்காக எல்.ஐ.சியை அணுகிய போது 1.5 லட்சம் கோடிகளை, அதாவது ஆண்டுக்கு 30,000 கோடிகள் வீதம் ஐந்தாண்டுகளுக்கு தருவதாக உடனே உறுதி தந்தது. அதே போன்று நெடுஞ்சாலை, குடி நீர் திட்டங்கள், போக்குவரத்து, பாலங்கள், துறைமுக மேம்பாடு, நீர்ப்பாசனம், மின்சாரம் என ஆதாரத் தொழில்களுக்கு பெரும் நிதியாதாரங்களை தந்துள்ளது.  ஒரு நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு வேறு என்ன வேண்டும்!  இந்த நாளில் ஓர் வேண்டுகோளை உங்களுக்கு (பிரதமருக்கு) முன் வைக்கிறேன். எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாத, எல்.ஐ.சி பங்கு விற்பனை முடிவை மறு பரிசீலனை செய்யு மாறு வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

;