tamilnadu

img

வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்

வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம் 

வேலூர் மாவட்ட வருவாய் துறை சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் 7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட தலைநகரில்  ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் வி.ரமேஷ், பி.விநாயகம், பி.கோவிந்த்ஶ்ரீ, டி.சுதர்சன், ஜி.துரைராஜ் ஆகியோர் தலைமையில் வகித்தனர். இதில்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்துவரும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய பணிப்பாதுகாப்பு அளித்திடுமாறும், வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடைபெறும் பட்சத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிட சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள்