tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பொதுமக்களுக்கு பணத்தை மீட்டுத் தரவும்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா, “வைப்புத் தொகை (டெபாசிட்) பெற்று பொது மக்களை ஏமாற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எந்த அளவிற்கு  எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்” என கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர், “தீவிர விழிப்புணர்வு  பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தியும், ஏற்கெனவே ஏமாந்திருக் கும் பொதுமக்களே இன்னும் ஏமாந்து கொண்டிருக்கிறார் களே என்ற வருத்தம் அதிகம் இருக்கிறது. இருந்தாலும், பெரு மளவில் அதைக் கட்டுப்படுத்தி ஓரளவிற்கு குறைத்திருக் கிறோம்” என்றார். டெபாசிட் பெற்று பொதுமக்களை ஏமாற்றி உள்ள நிறு வனங்களிடம் இருந்து, கடந்த நான்கு ஆண்டுகளில் 102 கோடியே 96 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்திருக்கிறோம். மேலும், 2,670 கோடியே 89 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை  கண்டுபிடித்திருக்கிறோம். அத்துடன், பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்து, டெபாசிட் பெற்று ஏமாற்றி இருக்கும் நிறு வனங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொடுக்கவும் இந்த  அரசு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் கூறி னார்.

பெண் காவலர்களுக்கான சலுகைகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.மாரிமுத்து உரையாற்றும்போது பெண் காவலர்களுக்கான திட்டங்களைப்  பற்றிக் கேட்டார். இதற்கு விளக்கமளித்த முதலமைச்சர், “கண வரும் காவல்துறையில் பணியாற்றினால், அந்தப் பகுதியில் பணியிட மாறுதல் வழங்குகிறோம். மகப்பேறு விடுப்பு முடித்து  பணிக்குச் சேரும்போது, மூன்றாண்டுகளுக்கு விரும்பிய ஊரில் பணியிட மாறுதல் வழங்கக் கூடிய அந்தத் திட்டத்தை யும் கொண்டு வந்திருக்கிறோம். கருவுற்றிருக்கும் காலத்தில்  சீருடை அணிவதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. பெண் காவலர்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வசதி யும் செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிவறை வசதியும் ஏற்படுத் தப்பட்டுள்ளது” என்றார்.

கலப்புத் திருமண தம்பதிகளுக்கு அரசுப் பணி?

மானியக் கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன், “மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி வழங்கும் போது கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசுப்  பணியில் முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால், அரசுப் பணி யாளர் தேர்வு வாரியம் மூலம் அரசுப் பணிகள் வழங்கும் போது கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை” என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ், “அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம்  கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை  வழங்குவதற்கு அரசாணை இல்லை. முன்னுரிமை அடிப்ப டையில்தான் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பணி வழங்கப்பட்டதை தவிர, இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும் என அரசாணை இல்லை. எனவே, சட்டத்  துறையில் இதுகுறித்து கலந்து பேசி தேர்வாணையம் மூலம்  அரசுப் பணி வழங்கும் போது கலப்பு திருமணம் செய்து கொண்ட வர்களுக்கு பணி வழங்க முடிவு செய்யப்படும்” என்றார்.

அடையாள அட்டை அவசியம்

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பேசும்போது, “தமிழகத்தில் வேலை தேடி வரும் வடமாநிலத்தவர் எண் ணிக்கை அதிகரித்துவிட்டது. மேலும், அவர்கள் தூத்துக்குடி சென்னை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிரச்சனைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர்,  அதை தட்டி கேட்கப் போன காவல்துறையினரை கடுமையாக  தாக்கி, ஓட விடுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். மேலும்,  வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல பிற மாநில தொழி லாளர்களை கண்காணிக்கும் முறையை கொண்டு வர  வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த தொழிலாளர் நலத் துறை அமைச்சர்சி.வெ.கணேசன், “தமிழ்நாட்டில் பணி யாற்றும் வடமாநிலத்தொழிலாளர்கள் எண்ணிக்கை குறித்து  கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடையாள அட்டை வழங்கு வது குறித்து விரைவில் பரிசீலனை செய்யப்படும்” என்றார்.

காவலர்களுக்கு வார விடுமுறை

தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமைக் காவலர்கள் வரை 4,48,983 நாட்கள் வார  விடுமுறையை, எஸ்எஸ்ஐ மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு  15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் 67,233 நாள்கள் விடு முறை அளிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான சட்டம்-ஒழுங்குப் பராமரிப்புப் பணிகள் உள்ள காலங்களில் மட்டும், தவிர்க்க இயலாத காரணங்களால், சில வேளைகளில் வார விடு முறை அளிக்க முடியாமல் போய்விடுகிறது. மற்றபடி வழக்கமான  காலங்களில் வார விடுமுறை நடைமுறையில் உள்ளது.

வானதி சீனிவாசனுக்கு பதிலடி

“காஷ்மீர் பிரச்சனையில் ஒன்றிய அரசின் பாதுகாப்புக் குறைபாடு  குறித்து நாங்கள் பேசவில்லை. ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கை களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றுதான் பேசியிருந்தோம். தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்தி எங்கு இருக்கிறது? எப்படி எந்த சூழ லில் இருக்கிறது என்று சொல்லுங்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் என்ன வெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். எந்தக் காரணத்தையும் கொண்டு தமிழகத்துக்குள் மதவாதம் நுழைய முடியாது. தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசின் நிதி வராமல் இருக்கும் செய்தி  உங்களுக்குத் தெரியும். அந்த நிதியைப் பெற்றுத் தருவதற்கு உங்கள் தலை மையிடம் குரலைக் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது? அதற்காக எவ்வளவோ குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண் டால்தான், நிதி கொடுக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் சொல்லி யிருக்கிறார். இதற்காக நாடாளுமன்றத்திலும் நாங்கள் குரல் கொடுத்திருக் கிறோம். அதற்காக வெளியில் வந்தும் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம்.  இதே சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டும் அனுப்பியிருக்கிறோம். இதெல்லாம்  உறுப்பினர் வானதி சீனிவாசன் அவர்களுக்குத் தெரியாதா? என்றும் முதல மைச்சர் பதிலடி கொடுத்தார்.

எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1000 குறைப்பு

காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் ஓ.எஸ்.மணியன், “எம்.சாண்ட், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை  குறைக்க போதிய அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அப்போது குறுக்கிட்ட நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது, ஆயிரம் ரூபாய் குறைத்து விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “எம்.சாண்ட், ஜல்லி விலையை யூனிட்  ஒன்றுக்கு 1,900 ரூபாய் வரை உயர்த்திவிட்டு, 1,000 ரூபாயை மட்டும் குறைத்து இருப்பதாக கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என கேள்வி எழுப்பினார். கனவு நனவானது தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ் மணி யன், “கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க அரசு  நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்பது கனவு திட்டமாகவே ஏழை-எளிய மக்களுக்கு இருக்கும்” என்று எச்சரித்தார். அப்போது குறுக்கிட்ட பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு பணிகள்  தொடங்கிய நிலையில், அதில் 80 விழுக்காடு முடிந்து விட்டது.  இந்த ஆண்டும் ஒரு லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்க நடவ டிக்கை எடுத்துள்ளதால் வீடற்ற மக்களின் கனவு நன வாகியுள்ளது” என்றார். ஊதிய முரண்பாடு காவல்துறையில் காவல் ஆளிநர்களாகப் பணியமர்த்தப் பட்டு, பதவி உயர்வு மற்றும் பல்வேறு நிலைகளில் காவல்  ஆளிநர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடுகள்  (ஊதியக்குழு அறிமுகத்தால் வரும் ஊதிய முரண்பாடு களை தவிர்த்து) தொடர்பான கருத்துருக்கள் சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்டு, அரசிற்கு அனுப்பப்பட்டு அரசின் பரிசீலனையில் இருக்கிறது. அதேபோன்று, காவலர்கள் பணி உயர்வை பொறுத்த வரை, காவலர்கள் பணியாற்றும் அந்தந்த மாவட்டம், மாநக ரத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆணையர்கள்  முடிவெடுக்கத்தான் விதிகளில் இடம் உள்ளது. எனவே, மாநில அளவில் ஒரே வகையான State Seniority அடிப் படையில் பதவி உயர்வு வழங்குவதற்கான தற்போதைய விதிகளில் இடம் இல்லாத நிலை நிலவுகிறது” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.