tamilnadu

img

ஜம்மு - காஷ்மீரில் முழு மாநில அந்தஸ்து மற்றும் ஜனநாயகத்தை மீட்டெடுத்திடுக!

ஜம்மு - காஷ்மீரில்  முழு மாநில அந்தஸ்து மற்றும் ஜனநாயகத்தை மீட்டெடுத்திடுக!

“ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து  வழங்கப்பட வேண்டும்”, என்றும்; “அம்மாநிலத்தில் ஜன நாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்” என்றும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஒன்றிய  அரசை வலியுறுத்தியுள்ளது. மதுரையில் நடைபெறும் மாநாட்டில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமி கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதா வது: 2019 ஆகஸ்ட் 5 அன்று அரசியலமைப்பிற்கு முரணான  மற்றும் பேரழிவு தரும் முடிவுகளை ஒன்றிய அரசு  மேற்கொண்டது. அரசியல் சாசனத்தின் பிரிவுகள்  370 மற்றும் 35ஏ-ஐ ரத்து செய்தது. தன்னிச்சையான சட்டங்கள் மற்றும் அவமானகரமான நடவடிக்கை களானது, வரலாற்றுச் சிறப்புமிக்க ஜம்மு - காஷ்மீர்  மாநிலத்தை இரண்டு துண்டாக்கி தரமிறக்கியுள்ளது. மாநில அந்தஸ்தைப் பறித்து, மாநிலத்தை இரண்டு யூனி யன் பிரதேசங்களாகப் பிரித்தது, ஒரு ஆழமான அரசி யல் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது மற்றும்  மக்களி டையே நிச்சயமற்ற தன்மையையும் அந்நியப்படுத்தப் பட்ட உணர்வையும்  தீவிரப்படுத்தியுள்ளது. சிவில் உரிமைகள் பறிப்பு;  அரசியல் தலைவர்கள் கைது சிவில் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் ஜன நாயக சுதந்திரங்கள் தொடர்ந்து அரிக்கப்பட்டு வருகின்  றன. யுஏபிஏ மற்றும் பிஎஸ்ஏ போன்ற கொடூரமான சட்  டங்களின் கீழ் தன்னிச்சையான கைது நடவடிக்கை கள்  தொடர்ச்சியான விதிமுறையாகி விட்டன. நூற்றுக்க ணக்கான அரசியல் ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகை யாளர்கள் ஜம்மு - காஷ்மீருக்கு உள்ளேயும் வெளியே யும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு சரி பார்ப்பு என்ற சாக்குப்போக்கில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன, அதே  நேரத்தில் பாஸ்போர்ட்டுகள் அற்பமான காரணங்களுக் காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பின்மை அதிகரிப்பு  சிறப்பு உரிமைகள் பறிப்பு மகாராஜா ஹரி சிங் ஆட்சிக் காலத்தில் இருந்தே  ஜம்மு - காஷ்மீர் மக்கள்  நிலம் மற்றும் வேலைகளைப்  பாதுகாப்பதில் சிறப்பு உரிமைகளை அனுபவித்து வந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வசிக்காதவர்கள் நிலம் வாங்கவும் வேலைகளைப் பெறவும் அனு மதிக்கப்படவில்லை.

வேறு சில மாநிலங்களிலும் மக்க ளுக்கு இதுபோன்ற உரிமைகளை வழங்கும் இதுபோன்ற  ஏராளமான விதிகள் உள்ளன. ஆனால், ஜம்மு - காஷ்மீர்  நிரந்தர குடியிருப்பாளர்களுக்கான நிலம் மற்றும் வேலை வாய்ப்புக்கான இந்தப் பாதுகாப்புகள் தன்னிச்சை யாகப் பறிக்கப்பட்டன, இது மக்களிடையே பாதுகாப் பின்மையை அதிகரித்தது. மாநிலத்தின் பொருளாதாரம் தொடர்ந்து மோசம டைந்து வருகிறது. வளர்ச்சி, முதலீடு மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் போன்ற பெரும் வாக்குறுதிகள்  நிறைவேற்றப்படவில்லை. கூலித் தொழிலாளர்களுக்கு கூலி நிச்சயம் இல்லை. விவசாயம், தோட்டக்கலை, கை வினைப்பொருட்கள் மற்றும் போக்குவரத்து போன்ற முக்கியத் துறைகள் தீவிரமான நெருக்கடியில் உள்ளன.  குறிப்பாக ஆப்பிள் விவசாயிகள் பெருகிவரும் சவால் களை எதிர்கொள்கின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை  (MSP) போன்ற சட்ட உத்தரவாதங்கள் இன்னும் இல்லாத  நிலை உள்ளது. பாஜகவின் முயற்சியை  முறியடித்த காஷ்மீர் மக்கள் 2029 ஆகஸ்ட் முதல், உள்துறை சட்டங்களில் மாற்றங்  கள், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அரசு  ஊழியர்களை அச்சுறுத்துதல் போன்ற நிர்வாக உத்தரவு கள் பொதுவானதாகி விட்டன. இந்த அடக்குமுறை நட வடிக்கைகள் இருந்தபோதிலும், ஏழு ஆண்டு இடை வெளிக்குப் பிறகு நடைபெற்ற சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குப்பதிவு காணப்பட்டது, மக்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர். மாநி லத்தை வகுப்புவாத மற்றும் பிராந்திய அடிப்படையில்  திரட்டிடவும் (துருவப்படுத்தவும்), பணபலம் மற்றும்  பிரதிநிதிகளைப் பயன்படுத்தி முடிவை மாற்றிடவும்  பாஜக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.  பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கை களை மக்கள் தெளிவாக நிராகரித்து, 2019 ஆகஸ்ட் 5  அன்று ஜம்மு - காஷ்மீர் மீதான அதன் அரசியலமைப்புக்கு  எதிரான தாக்குதலுக்கும், அதைத் தொடர்ந்து நடந்த இரக்க மற்ற அடக்குமுறைக்கும் எதிராக தீர்ப்பை வழங்கியுள்ளனர்.