சென்னை, நவ. 20- எலக்ட்ரிக்கல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களு க்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் முதல் மாநில மாநாடு பெரம்பூரில் ஞாயி றன்று (நவ. 20) நடை பெற்றது. ஏ.பழனி தலைமை தாங்கினார். சங்க கொடியை ஜி.சந்திரசேகரன் ஏற்றி வைத்தார். கே.நடராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசி த்தார். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன் வரவேற்றார். சிஐடியு மாநில உதவி பொதுச்செயலாளர் வி.குமார் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், “நாடு முழுவதும் அமைப்புசாரா தொழிலில் 40 கோடி பேர் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட் டில் 3 கோடி பேர் உள்ளனர். இதில் எலக்ட்ரிக்கல் தொழி லில் ஈடுபடுவோர் மட்டும் 10 லட்சம் பேர் உள்ளனர்” என்றார்.
நாட்டில் நிரந்தர தொழி லாளர்களின் எண்ணிக்கை யை விட முறைசாரா தொழி லாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மின்சார பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் தினசரி வேலை கிடைத்தாலும் கூலி என்ற நிலையிலேயே உள்ளனர். இதற்கு காரணம் ஆட்சியாளர்களின் தவறான கொள்கையாகும். நாம் நம் வாழ்வாதார கோரிக்கை களுக்காக போராடும் அதே நேரம், ஆட்சியளர்களின் தவறான கொள்கைகளை யும் எதிர்த்து போராடவும் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறினார். மாநில ஒருங்கிணைப் பாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணி யன் வேலை அறிக்கையை யும், டி.கே.சம்பத்ராவ் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.திருச் செல்வன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைப் பொதுச்செயலா ளர் கே.ரவிச்சந்திரன், கே.செல்லப்பன், வி.எஸ்.குமார் (கன்னியாகுமரி), வி.பி.கந்தசாமி, சி.முரு கேசன் (கரூர்), கே.தங்க மணி (நாகை), டி.கோவிந்த ராஜூ (தஞ்சை), டி.ஸ்ரீதர் (காஞ்சிபுரம்) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அமைப் பின் மாநில பொதுச் செயலாளர் கே.அருட் செல்வன், மத்திய அமைப் பின் மாநில பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்டு மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசி னார். வரவேற்புக் குழு செயலாளர் எஸ்.ஜெய்சங் கர் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
எலக்ட்ரிக்கல் தொழி லில் ஈடுபடும் தொழி லாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், ஆய்வு உரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்த வர்களில் தகுதி உடைய வர்களுக்கு உடனே சான்றி தழ் வழங்க வேண்டும், பணி யிடத்தில் விபத்து ஏற்பட்டு ஊனமோ, உயிரிழப்போ ஏற்பட்டால் தகுந்த இழப் பீடு வழங்க வேண்டும், எலக்ட்ரிக்கல் தொழி லாளர்களுக்கு என தனி நலவாரியம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்கமானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
தலைவராக எஸ்.ஜெய்சங்கர், செயலாளராக எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பொருளாளராக டி.கே.சம்பத் ராவ் உள்ளிட்ட 13 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.