சென்னை, செப். 6- வடசென்னை வளர்ச்சி திட்டங்கள் எவை எவை என் பதை வெளிப்படையாக அறி விக்க வேண்டும் என தலைமைச் செயலாளரிடம் வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங் களின் கூட்டமைப்பு வலியுறுத் தியுள்ளது. வட சென்னைக்கு சிறப்பு திட்டம் - வளர்ச்சிக் கொள்கை தேவை என்றும், வடசென் னையை கிரைம் சிட்டியாக முத்திரை குத்துவதை கைவிடுங் கள் என்பதை வலியுறுத்தியும் வடசென்னை முழுவதும் உள்ள குடியிருப்போர் நலச் சங்கங் களை இணைத்து “வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங் களின் கூட்டமைப்பு” அண்மை யில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் கூட்டமைப் பின் தலைவர் டி.கே.சண் முகம், செயலாளர் ஆர்.ஜெய ராமன், பொருளாளர் ஆர்.பொன்னுசாமி, சட்டத்துறை செயலாளர் பி.அருண்குமார், அமைப்புச் செயலாளர்கள் எஸ்.ஏ.வெற்றி ராஜன், ஆர்.அருண்குமார், சி.சடகோபன் ஆகியோர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தத்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த ஜூலை 6ஆம் தேதி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தின் (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா வெளி யிட்ட அறிவிப்பில், “சென்னை யில் சீரான மற்றும் சமமான வளர்ச்சியை உறுதி செய்வ தற்காக 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்ட வடசென்னை வளர்ச்சி திட்டம் சிஎம்டிஏ நிதியை பயன்படுத்தி செயல்படுத்தப்படும் என்றும், 2023 செப்டம்பரில் வடசென்னை யில் மேற்கொள்ளப்பட்ட சமூக, பொருளாதார ஆய்வின் படி எந்தெந்த பகுதிக்கு என்ன தேவை என்ற அடிப்படையில் திட்டங்கள் 2 தயாரிக்கப்பட்டு, ரூ.4,181 கோடி மதிப்பீட்டில் 219 திட்டங்கள் இறுதி செய்யப் பட்டன என்றும் தெரிவித்துள் ளார்.
மேலும் அவரது அறிவிப் பில், தற்போதைய நிலவரப்படி, ரூ. 2,236.41 கோடி மதிப்பீ ட்டில், 100 திட்டங்களுக்கான பணிகள் துவங்கப்பட்டு நடை பெற்று வருவதாகவும், மீத முள்ள திட்டங்கள் 2,141.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் துவங்கப்பட்டு 2025க்குள் முடிக் கப்படும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. வடசென்னை பின்தங்கி யுள்ளது என்பதை ஏற்றுக் கொண்டு, முதன்முறையாக வட சென்னைக்கென்று வளர்ச்சி திட்டத்தை அரசு அறிவித்ததற்கு எங்களது கூட்டமைப்பின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரம் ஆய்வுகளின் விவரம் வெளிப்படையாக அறி விக்காததால், வளர்ச்சி என்பதில் எதற்கு அரசு முக்கியத்துவம் தரு கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, வடசென்னை வளர்ச்சி திட்டம் குறித்த சமூக, பொருளாதார ஆய்வை வெளிப் படையாக அறிவிக்கவும், அரசு திட்டமிட்டுள்ள 219 பணிகள் குறித்தும், நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படும் 108 பணிகள் குறித்த முழு விவர த்தையும் வெளியிட தாங்கள் ஆவன செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள் ளது. பின்னர் கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகை யில், வட சென்னையின் வளர்ச் சிக்கு அரசு செய்ய வேண்டி யதை பட்டியலிட்டு
8 மனுக்கள் தனித்தனியாக தலைமைச் செயலாளரிடம் அளி த்துள்ளோம். வளர்ச்சி திட்டத் தின் கீழ் என்னென்ன பணிகள் நடைபெற்றுள்ளன என்றும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 218 பணிகள் குறித்தும் அறிவிக்க வேண்டும் என்று கேட்டோம். அதை ஏற்றுக் கொண்ட தலை மைச் செயலாளர் அதை சிஎம்டிஏ வெளியிட வலியுறுத்துவதாக தெரிவித்தார். கடல் நீரை குடி நீராக்கும் மீஞ்சூர் பிளான்ட் செயல்படாமல் உள்ளதை உடன டியாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். வடசென்னை முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் குடி நீரில் சாக்கடை நீர் கலந்து வரு வதை தடுக்க வேண்டும் என்றும், பாதாள சாக்கடை குழாய்களை நவீன முறையில் மறுகட்டு மானம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம், அவர் உடன டியாக குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநரை தொலைபேசி யில் தொடர்பு கொண்டு எங்கெங்கு இந்த பிரச்சனை கள் இருக்கிறதோ, அதை உடன டியாக சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். பருவ மழை வந்தால் வடசென்னயின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக விடும் என்றும், குறிப்பாக மழை வந்தால் மூலக் கடை, எம்.ஆர்.நகர் பகுதி தண்ணீரில் தத்தளிக்கும். எனவே கேப்டன் கால்வாய் கரை மற்றும் சுற்றுச்சுவரை உயர்த்த வேண்டும் என்று கூறியபோது, சென்னை மாநகராட்சி ஆணை யரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக செய்து தர உத்தரவிட்டார். நிதி இல்லை என்று ஆணையர் கூறிய போது, மதிப்பீடு அனுப் புங்கள் பார்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார். வடசென்னையில் சட்டக் கல்லூரி, அறிவியல் கலைக் கல்லூரி, ஐஏஎப் கல்லூரி அமைக்க வேண்டும், கலை அரங்கம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பிற கோரிக்கைளையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்று அவர் கூறி னார்.
வடசென்னையில் 50 லட்சத்திற்கு மேல் மக்கள் வசிக்கும் நிலையில், மிகச் சொற்ப நபர்களிடம் கருத்து கேட்டு ஒரு வளர்ச்சி திட்டத்தை உருவாக்கினால் அது முழுமை பெறுமா என்ற சந்தேகம் எழுகிறது. ஆய்வு முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்காததால் வடசென்னை மக்களின் எதிர்பார்ப்பிற்கும், வடசென்னை வளர்ச்சி என்ற அரசின் நல்ல நோக்கத்திற்கும் இடையில் பெருத்த இடைவெளியும், நம்பகமற்றத் தன்மையுமே நிலவுகிறது.
பணிகளாக கூறப்படுகிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. வடசென்னை வளர்ச்சி திட்டம் என்ற அரசின் நல்ல நோக்கமும், வடசென்னை மக்களின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பும் இடைவெளியின்றி இணைந்து நிறைவேற வேண்டும் என்பதே கூட்டமைப்பின் விருப்பமாகும். சென்னை பெருநகரத்திற்கு என்று உருவாக்கப்பட்ட 2ஆவது மாஸ்டர் பிளான் சுட்டிக்காட்டும் ஆலோசனைகள் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் ஆய்வறிக்கைகள் அனைத்தும், நகரில் வசிக்கக்கூடிய அனைவருக்கும் குடியிருக்கும் வீட்டை உத்தரவாதப்படுத்துவதும், வேலை செய்ய தகுதியுள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துவதும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுத்து, சாக்கடை கலக்காத சுத்தமான குடிநீர் வழங்குவதும் அவசியம். இலவச மருத்துவம், பொது சுகாதாரம், நெரிசல் இல்லாத பொது போக்குவரத்து, தரமான இலவச கல்வி, கழிவுநீர் தேங்கி அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் புதிய பாதாள சாக்கடை திட்டம், குப்பைகளை உடனுக்குடன் அகற்றி நோயற்ற வாழ்வை உத்திரவாதப்படுத்தவேண்டும். தரமான சாலைகள், வெள்ளப்பெருக்கு ஏற்படா வண்ணம் மழை நீர் வடிகால் திட்டம், ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாத்தல், மாசற்ற காற்று, தடையற்ற மின்சாரம் ஆகியவையே நிலையான நகர கட்டமைப்பு வளர்ச்சியாக இருக்கும்.