தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் 4 சட்டத் தொகுப்புகளை ரத்து செய்க! சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் உரிமை களை பறிக்கும் 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வலியுறுத்தி அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் திங்க ளன்று (மார்ச் 23) பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மோட்டார் தொழிலை கார்ப்பரேட் மயமாகும் மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளை திரும்பப் பெற வேண்டும். மோட்டார் தொழி லுக்கும், தொழிலாளர் களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. 15 வது ஊதிய ஒப்பந்த விரைந்து பேசி முடிக்க வேண்டும், வரவுக்கும் செலவுக்கும் வித்தியாசத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும், 21 மாதங் களாக ஓய்வு பெற்ற தொழி லாளர்களுக்கு வழங்கப் படாமல் உள்ள ஓய்வு கால பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும், ஓய்வூ தியர்களுக்கு 114 மாதங்கள் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வற்புறுத் தியும் முழக்கமிட்டனர். சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமையில் பொதுச் செயலாளர் தயா னந்தம், பொருளாளர் ஏ.ஆர். பாலாஜி, துணைப் பொதுச் செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, முரளி கணேஷ், ரவி சங்கர் உள்ளிட்டோர் பேசி னர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்திற்கு சிபிஐ சீல் : ஆவணங்கள் பறிமுதல்
லஞ்ச விவகாரம் தொடர்பாக புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரின் அலுவல கம் மற்றும் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ, ஆவணங்களை கைப்பற்றி யுள்ளது. மேலும், தலைமைப்பொறி யாளர் அறை சீல் வைக்கப்பட்டது. புதுவை பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளராக இருப்பவர் தீனதயாளன். இவர் கடந்த 2024 மார்ச்சில் பொறுப்பேற்றார். இவர் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைக்க காரைக்காலுக்குச் சென்றார். அங்கு காரைக்கால் கடற்கரையில் உள்ள அரசு சீகல்ஸ் ஓட்டலில் தங்கி இருந்தார். அங்கு அவரை காரைக்கால் பொதுபணித்துறை அதி காரிகள் சந்தித்துப் பேசினர். அரசு ஒப்பந்ததாரர்கள் சிலரும் இருந்த தாக தெரிகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், பொதுப்பணித் துறைஅதிகாரிகள் மற்றும் அரசு ஒப்பந் ததாரர்களை அங்கு விசாரணைக்கு உட்படுத்தினர். இந்த விசாரணை சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி ஞாயிறு மாலை வரை நீடித்தது. விசாரணை யில் ஆவணங்களும், லட்சக்கணக்கில் பணமும் சிக்கியதாக தெரிகிறது. இதற் கிடையே சிபிஐ பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலை மையிலான பிரிவினர் புதுச்சேரிக்கு வந்தனர். அவர்கள் புதுச்சேரி லால் பகதூர் சாஸ்திரி வீதியில் உள்ள மாநில பொதுப்பணித்துறை தலைமை அலு வலகத்தில் உள்ள தலைமைப் பொறி யாளர் தீனதயாளன் அறையில் சோதனையிட்டனர். அதையடுத்து அறையைப் பூட்டி சீலிட்டனர். சீலிடப்பட்ட பூட்டுக்கு மேலே சீலிட்ட விவரமும் சிபிஐ பிரிவினரால் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. அதில் கதவைத் திறக்கக் கூடாது என்ற வாச கத்துடன், சீலிடப்பட்டது என்றும் சிபிஐ துணைக் கண்காணிப்பாளர் ஜெயசீலன் பெயர், பதவி விவரங்கள், அவரது கைபேசி எண் ஆகியவையும், அதற்கு கீழ் முதன்மை அதிகாரி மோகன் என குறிப்பிட்ட அதிகாரியின் கையெழுத் தும் இடம் பெற்றுள்ளன. புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் உள்ள தலைமை பொறியாளர் வீட்டி லும் சிபிஐ தரப்பில் சோதனையிடப் பட்டது. மேலும், அவரது மனைவி, மகளிடம் விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது.