தஞ்சாவூர், பிப்.28 - தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டியில் சனிக்கிழமை மாலை சமயச் சார்பின்மை, சமூகநீதி பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது. மைக்கேல் பட்டி பொதுமக்கள், சமயச் சார்பின்மைக்கான சனநாயகக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி, கும்ப கோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட தலைவர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல். திருமா வளவன் (எம்.பி), எம்.எல்.ஏக்கள் எம்.சின்னத்துரை (கந்தர்வகோட்டை), அப்துல் சமது(மணப்பாறை), சிபிஐ தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழர் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, தமிழக மக்கள் கட்சித் தலைவர் செரீப், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஹசன் இமாம், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், வழக்கறி ஞர் வெ.ஜீவக்குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.
கூட்டத்தில் தொல்.திருமாவள வன் பேசுகையில், “பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் இந்தியா வில் மத அரசியலையும், தமிழகத்தில் சாதி அரசியலையும் செய்து இந்துக் களிடையே பிரிவினைவாதத்தை தூண்டுகின்றனர். கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே வெறுப்பு அரசியலை ஏற்படுத்தி பாஜக ஆதாயம் அடைய துடிக்கிறது. தமிழக அரசும், காவல்துறையும் நமக்கு ஆதரவாக இருந்து வருகிறது. எனவேதான் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை தொடர்பான விசாரணை குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. பாஜகவின் ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ப தெல்லாம் தாண்டி, நகர்ப்புற உள்ளா ட்சித் தேர்தலில் பாஜக ஒரே ஒரு வாக்கை பெற்றுள்ளது. இந்தியாவில் 800 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் ஆட்சி புரிந்தனர், 400 ஆண்டுகள் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி புரிந்தனர். அப்போதெல்லாம் அவர்கள் நினைத் திருந்தால் இந்துக்களை கட்டாய மாக மதம் மாற்றி இருக்கலாம், ஆனால் அப்படி செய்யவில்லை. அப்போதெல்லாம் நடைபெறாத மத மாற்றத்தை இப்போது செய்கிறார்களா? இப்படி பிரச்சாரம் செய்வது அரசியலுக்காக சனாதன கும்பல் செய்யும் சதி வேலையே. அம்பேத்கர் சிலையை அவமதித்த பாஜக உள்ளிட்ட சங்பரிவார் கும்பல், தற் போது தந்தை பெரியார், திரு வள்ளுவர் சிலைகளையும் அவமதி க்க தொடங்கியுள்ளனர். மதநல்லி ணக்கத்தை பாதுகாப்பது நம்முடைய தமிழ்மண் என்பதை உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்றார்.