tamilnadu

img

சிபிஎம் புதுச்சேரி மாநில மாநாடு: இலச்சினை வெளியீடு

புதுச்சேரி நவ.18- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி 24வது மாநாட்டிற்கான இலச்சி னையை அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன்  வெளியிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது புதுச்சேரி மாநாடு நவம்பர் 30, மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் வில்லியனூரில் நடை பெறுகிறது. இம் மாநாட்டிற்கான தயாரிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதி கள் பங்கேற்கக் கூடிய மாநாட்டிற்கான இலச்சினை (லோகோ) வெளியிடப்பட் டுள்ளது.  கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தனது முக நூல் பக்கத்தில் இலச்சினையை ஞாயிற்றுக் கிழமை மாலை வெளியிட்டார்.  சமூக ஏற்றத்தாழ்வு ஒழியட்டும், சமூக பொருளாதார சமத்துவம் புதுச்சேரியில் மலரட்டும் என்ற முழக்கத்துடன் இந்த இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.