கமிஷன்குறைப்பு, ஜிஎஸ்டிக்கு எதிராக ஆயுள்காப்பீட்டுக்கழக (லிகாய்) முகவர்கள் தில்லியில் தர்ணாவில் ஈடுபட்டனர். ஆயுள் காப்பீட்டுக்கழக பாலிசி தாரர்களிடம் வசூலிக்கப்படும் 4.5 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும். வழக்கம் போல் 25 சத வீதம் கமிஷன் வழங்க வேண்டும். பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்திட வேண்டும். தனியாருக்கு சாதக மான பீமா சுகம் செயலியை செயல் படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு பிப்.11 அன்று ஆயுள் காப்பீட்டுக்கழக முகவர்கள் (லிகாய்) தர்ணாவில் ஈடுபட்டனர்.
சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென், முன்னாள் எம்.பி., பி.சம்பத் ஆகியோர் லிகாய் முகவர்களின் கோரிக்கை களை வலியுறுத்தியதோடு அவற்றை ஒன்றிய அரசு நிறை வேற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர். அமைப்பின் அகில இந்தியத் தலைவர் சுர்ஜித்போஸ், பொதுச் செயலாளர் பி.ஜி.திலீப், தென் மண்டல செயல் தலைவர் எம்.செல்வராஜ், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ்.ஏ.கலாம், தமிழ கத் தலைவர்கள் எஸ்.கே.சுப்ர மணியராஜா, கே.மாரி உட்பட இந்தியா முழுவதும் இருந்து பல்லா யிரக்கணக்கான முகவர்கள் கலந்து கொண்டனர்.
பாலிசிக்கு ஜிஎஸ்டி அநியாயம்
போராட்டம் குறித்து செய்தியா ளர்களிடம் பேசிய தலைவர்கள், மக்களின் பாதுகாப்பு, தனிநபர் பாதுகாப்பு, குடும்பத்தினர் பாது காப்பிற்காக அரசு காப்பீட்டு நிறுவனமான ஆயுள்காப்பீட்டுக் கழகத்தில் மக்கள் பணம் செலுத்து கின்றனர். அரசு நிறுவனத்தைப் பாதுகாக்கவும், அரசிற்கு வருமா னம் ஈட்டித்தருவதற்கும் அரசிற் கும்-எல்ஐசி-க்கும் பாலமாக முக வர்கள் உள்ளனர். இந்தச் சூழலில் பாலிசிதாரர்களுக்கு 4.5 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பது அநியாயமா னது. இதை ரத்து செய்ய வேண்டும். ஆயுள் காப்பீட்டுக்கழகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து முக வர்களுக்கு 25 சதவீதம் கமிஷன் வழங்கப்பட்டது. ஒன்றிய மோடி அரசு 2024-ஆம் ஆண்டு அக்டோ பர் மாதம் முதல் கமிஷனை 20 சத வீதமாகக் குறைத்து விட்டது. முக வர் பணியை நம்பியேயிருக்கும் பல்லாயிரக்கணக்கானோருக்கு இதனால் வருவாய் இழப்பு ஏற்படு கிறது. எனவே பழைய கமிஷன் தொ கையையே வழங்க வேண்டும். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்க ளுக்கு ஏற்ப பாலிசிதாரர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. அதை உயர்த்தி வழங்க வேண்டும்.
தனியாருக்குச் சாதகமான “செயலி” “
பீமா சுகம்” செயலியை ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது. இந்தச் செயலி மிகவும் ஆபத்தா னது. அரசுத்துறை நிறுவனமான ஆயுள்காப்பீட்டுக்கழக முகவர் கள் மிகவும் கஷ்டப்பட்டு பாலிசிதா ரர்களை சேர்க்கின்றனர். அப்படிச் சேரும் பாலிசிதாரர் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் ஆடம் பரமான, கவர்ச்சிகரமான விளம் பரங்களை நம்பி எப்போது வேண்டு மானாலும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு செல்லும் வகையில் இந்தச் செயலி வடிவ மைக்கப்பட்டுள்ளது. இப்படி பாலிசிதாரர்கள் தனி யார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மாறினால் அரசும் காப்பீட்டு நிறு வனமும் மட்டுமல்ல, முகவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவர். தனியார் காப்பீட்டு நிறுவனங்களை வளப்படுத்துவதற்காகவே இந்த செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ள தாகவே நாங்கள் கருது கிறோம். எனவே, ஒன்றிய அரசு, பீமா சுகம் செயலியை செயல் படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டோம். எங்களது போராட்டம் தொடரும். ஆயுள் காப்பீட்டுக்கழ கத்தையும் அரசுத்துறை நிறுவ னங்களையும் பாதுகாப்பதே எங்களது நோக்கம் என்றனர்.