tamilnadu

img

மகப்பேறின்போது குழந்தைகள் இறப்பு விகிதம் குறைப்பு

மகப்பேறின்போது குழந்தைகள் இறப்பு விகிதம் குறைப்பு

தஞ்சை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர், மே 19-  தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறின்போது குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைத்ததற்காக மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கினா். தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு தஞ்சாவூா் மாவட்டம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களும் மகப்பேறு சிகிச்சை பெறுகின்றனா். இங்கு நாள்தோறும் சுமார் 40 குழந்தைகளும், மாதந்தோறும் சராசரியாக 1,200 குழந்தைகளும் பிறக்கின்றன. இதில், மகப்பேறின்போது மாதத்துக்கு ஏறத்தாழ 30 குழந்தைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்து வந்தன. மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் பேரில் உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல், நவீன உபகரணங்கள் அளித்தல், தாய்மார்களுக்கு சத்தான மருந்து, மாத்திரைகள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.இதன் மூலம், கடந்த 10 மாதங்களாக மகப்பேறின்போது குழந்தைகள் இறப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக பாடுபட்ட மருத்துவா்கள், செவிலியா்களைப் பாராட்டி மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை நற்சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம், மகப்பேறு மருத்துவத் துறைத் தலைவா் பாக்கியவதி, குழந்தைகள் நலத் துறைத் தலைவா் பி. செல்வகுமார், மருத்துவா் அரவிந்தன் உள்