நாடு முழுவதும் பருவமழை தீவிர மடைந்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை யானது கீழ்நோக்கி நகர்ந்து மகாராஷ்டிரா, கோவா, கேரளா மற்றும் கர்நாடகா மாநி லங்களின் கடலோ ரங்களில் நிலை கொண் டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா, கோவா, கேரளா, கர்நா டகா ஆகிய 4 மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், வரும் நாட்களில் மிக கனமழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை மையம், 4 மாநிலங்களுக்கும் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த “ரெட் அலர்ட்” எச்சரிக்கை அடுத்த 48 மணிநேரம் நிலுவையில் இருக்கும் எனவும், கடலோர கர்நாடகா, கேரளா மற்றும் கோவாவில் அடுத்த சில நாட்களு க்கு 20 செ.மீ.க்கு மேல் மழை பெய் யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.