பாளையத்தில் ரமலான் சமூக நல்லிணக்க சந்திப்பு
தேனி மாவட்ட தன்னார்வலர்கள்,நன்செய் தன்னார்வ அமைப்பு,தேனி ரூரல் அப்ளிப்ட்மென்ட் சோஷியல் டிரஸ்ட், இணைந்து நடத்திய ரமலான் - ஈகைத் திருநாள். சமூக நல்லிணக்க சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலபிரஜாபதி அடிகளார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கரன்குமார், பொருளாளர் விக்னேஸ்வரன், ராஜா, குமரேசன், ஜெகதீஸ்வரன், பெருமாள், பிரபாகரன், நாகராஜ், பொன்ராஜ், வனராஜ் கட்சியின் உத்தமபாளையம் ஏரியா கமிட்டி செயலாளர் டி.கே.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.