tamilnadu

img

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் அறிவிப்பு

டெல் அவிவ்/ காசா, அக்.7- பாலஸ்தீனத்தின் மீது அதிகாரப் பூர்வ போர் அறிவிப்பு செய்து ராணு வத்தாக்குதல்களை துவக்கி பேரழிவு  வெறியாட்டத்தை இஸ்ரேல் நடத்தி யுள்ளது. 20 ஆம் நூற்றாண்டு முதல் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் தொடுத்து அதன் பகுதிகளை ஆக்கி ரமித்துள்ள இஸ்ரேல் பல பத்தாண்டு களாக பாலஸ்தீனர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 2015 முதல் 2023 வரை மட்டும் 50,000க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களை கைது செய்தும், குழந்தைகள், பெண்கள் என பல்லா யிரக்கணக்கானவர்களை படு கொலை செய்தும் நரவேட்டை ஆடி வருகிறது இஸ்ரேல் ராணுவம். 

கட்டுமானங்கள் அழிப்பு

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு 23  நாட்கள்,  2012 ஆம் ஆண்டு 8 நாட்கள்,  2014 ஆம் ஆண்டு 50 நாட்கள், 2021  ஆம் ஆண்டு 11 நாட்கள் என இஸ்ரேல்  ராணுவம் பாலஸ்தீனத்தின் மீது  கொடூர தாக்குதல்களை நடத்தி  அந்நாட்டின் அடிப்படை கட்டமைப்பு கள் அனைத்தையும் சிதைத்துவிட் டது. கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள், மின் உற்பத்தி நிலையங் கள், குடிநீர் அமைப்புகள் என அனைத்தையும் குறிவை த்து குண்டு வீசி அழித்து விட்டது. இதனால் 45 சத வீதம் வரை வேலை வாய்ப்பின்மை யும், நாளொன்றுக்கு 12 மணிநேரத் துக்கும் அதிகமான மின் வெட்டுக்கள்,  64 சதவீதத்திற்கும் மேலாக பாது காப்பான சுகாதாரமான உணவு, குடி நீர் மற்றும் வாழ்விடம் இல்லாத சூழ லில் பாலஸ்தீன மக்கள் வாழ்ந்து வரு கிறார்கள்.

இளைஞர்கள் படுகொலை

இந்த தாக்குதல்கள் தவிர பாலஸ்  தீனத்தின் மீது தொடர் வான்வழி  தாக்குதல்களையும் பாலஸ்தீனர் களின் வீடுகளில் கழிவு நீரை பீய்ச்சி அடிப்பது என மிக குரூரமான தாக்கு தல்களையும் தொடர் நிகழ்வுகளாக இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வந்தது. இது தவிர திடீர் ராணுவ நட வடிக்கை என்ற பெயரில் ஆக்கிர மிப்பிற்கு எதிராக போராடிவரும் பல ஆயிரம் பாலஸ்தீன இளைஞர்களை கைதும் கொலையும் செய்துள்ளது. ஆனால் இஸ்ரேல் ஆக்கிர மிப்பிற்கு எதிராக போராடும் குழுக்  களை தீவிரவாதிகள் என சர்வ தேச அளவில் முத்திரை குத்தி வைத்  துள்ளது இஸ்ரேல்.தற்போது பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்கு கரை நகரங்கள் சிறு பகுதிகளாக உள்ளன. இந்த பின்னணியில்தான் இஸ்  ரேல் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு குழுக்கள்  ஹமாஸ் தலைமை யிலான நிர்வாகம் நடைபெறும் காசா பகுதியில் இருந்து சனிக்கிழமையன்று இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் பகு திகளை நோக்கி ஏவுகணைத் தாக்கு தலை நடத்தின.

அறிவிக்கப்படாத போர் அதிகாரப்பூர்மானது

இதற்கு பதிலடி என்ற பெயரில், இதுவரை ‘அறிவிக்கப்படாத போரை’  நடத்தி வந்த இஸ்ரேல், பாலஸ்தீனத் தின் மீது சனிக்கிழமை மதியம் முதல்  அதிகாரப்பூர்வ போர் அறிவிப்பு  செய்து கொடூரமான தாக்குதல் களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.  ஹமாஸ் ஏவுகணைத் தாக்குத லைத் தொடர்ந்து அயன் டோம் என்ற  பாதுகாப்பு சாதனத்தை தனது வானத்தை பாதுகாக்க இஸ்ரேல் செயல்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனம் பதிலடி

நேரடிப் போராக மாறியுள்ள நிலையில், பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் இஸ்ரேலின் தென் பகு திக்குள் நுழைந்து நேருக்கு நேரான தாக்குதலை நடத்தினார்கள். வான்  வழி ட்ரோன் தாக்குதல்கள் மூலம்  இஸ்ரேல் ராணுவத்தின் டாங்கிகளை தகர்த்தனர். இஸ்ரேலின் இரண்டா வது பெரிய மின் உற்பத்தி  நிலையமாக அறியப்படும் ரூட்டென்பெர்க் மின் நிலையம் ஹமாஸின் ராக்கெட் தாக்குத லுக்குள்ளானது. 40 இஸ்ரேலியர்கள் கொல்லப் பட்டதாகவும் 750 நபர்களுக்கு மேல் காயம டைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரி விக்கப்பட்டது. இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் பல இஸ்ரேல் ராணுவ வீரர்களை பாலஸ்தீனர்கள் கைது செய்துள்ளனர்.

பத்திரிகையாளர் கொலை

இதனிடையே, பாலஸ்தீனத்தை சேர்ந்த முகமது அல் சாலிஹி என்ற பத்திரிகையாளர் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.  இஸ்ரேல் ஆக்கிரமித்த பாலஸ்தீன பகுதியை பிரிக்கும் எல்லைகளை புல்டோசர் மூலம் இஸ்ரேல் எதிர்ப்பு படைகள் தகர்த்து விட்டன. இந்த போர் துவங்கியவுடன் காசா மற்றும் மேற்கு கரை பகுதி மக்கள் மிகுந்த ஆரவா ரத்துடன் ஆக்கிரமிப்புக்கு எதிரான முழக்கங் களை எழுப்பினர்.

இஸ்ரேல் பிரதமர் வெறிக் கூச்சல்

போர் ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, போர் பாதி முடிந்துவிட்டது எனவும் இஸ்ரேல் வெற்றி  பெறும் என்றும் தெரிவித்தார்.இங்கிலாந்து, ஜெர்மன்,பிரான்ஸ் உள்ளிட்ட வலதுசாரி நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் பாலஸ்தீனத்திற்கு எதிராக கண்டனமும் தெரிவித்துள்ளன. ஈரான் அரசு பாலஸ்தீனர்களுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் அதிக சேதத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடவேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.  இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரே லுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குத லுக்கு அவர் அதிர்ச்சியும், கண்டனமும் தெரி வித்துள்ளார்.

இந்திய தூதரகம் உதவி எண் அறிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இந்தி யர்களை பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கும் படி அறி வுறுத்தியுள்ளதோடு உதவி தேவைப்படுப வர்களுக்கான மின்னஞ்சல் முகவரி (cons1.telaviva@mea.gov.in ) மற்றும் தொலைபேசி எண் (+97235226748) ஆகியவற்றை வழங்கி யுள்ளது. போர் துவங்கிய பிறகு பல ஆயிரம் மக்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர்.ஷார் ஹனேகேவ் நகரின் மேயர் ஓபிர் லிப்ஸ்டீன் தாக்குதலில் உயிரிழந்தார். இஸ்ரேலின் ராணுவத்தளங்களை கைப்பற்றி வந்த பாலஸ்தீனக் குழு இஸ்ரேல் ராணுவ மேஜர் ஜெனரல் நிம்ரோட் அலோனியை அவரது படைப் பிரிவினருடன் அவரது ராணுவத் தளத்தில் கைது செய்தது.  1973க்கு பிறகு 50 ஆண்டுகள் கழித்து இஸ்ரே லிய இரகசிய புலனாய்வுத் துறை முழுமையாக தோற்றுப் போயுள்ளது என மேற்கத்திய இராணுவ ஊடகங்கள் அலறியுள்ளன.