tamilnadu

img

சிபிஐ மாநிலச் செயலாளராக இரா.முத்தரசன் தேர்வு

சென்னை, ஆக. 9 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளராக இரா. முத்தரசன் தேர்வு செய்யப்பட்டார். திருப்பூரில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்றது.  இம்மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இரா. முத்தரசன் மூன்றாவது முறை யாக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப் பாட்டுக் குழுத் தலைவராக கே.சுப்பராயன் தேர்வு செய்யப் பட்டார். இம்மாநாட்டின் நிறை வாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் செந்தொண்டர் பேரணி நடைபெற்றது. திருப்பூர் நொய்யல் பாலம் அருகே மாநகராட்சி சாலை வளர்மதி பஸ் நிறுத்தம் முன்பாக இந்த பேரணியை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து முழக்கம் எழுப்பினர். 

முதல்வர் வாழ்த்து

“மூன்றாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தோழர் முத்தரசன் அவர்களுக்கு வாழ்த்துகள். சமத்துவத்தை நோக்கிய பொதுவுடைமைப் பாதையில் நமது இலட்சியத்தை நோக்கி தொடர்ந்து பீடுநடை போட வாழ்த்துகிறேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து 

சிபிஐ மாநிலச் செயலாள ராக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் இரா.முத்தரசனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்று சிபிஎம் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

;