இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் 2ஆவது சுற்றில் பி.வி.சிந்து
43 ஆண்டுகால பழமையான பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான “இந்தோனேசியா ஓபன் சூப் பர் 1000” பேட்மிண்டன் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் ஒற்றை யர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமியை எதிர்கொண்டார். வெற்றிக்காக இரு அணி வீராங்கனைகளும் கடுமையாக போராடியதால் டைபிரேக்கர் வரை இந்த ஆட்டம் நீண்டது. எனினும் இறுதியில் 22-20, 21-23, 21-15 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து அபார வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். ராங்கி - சிராக் ஜோடி அபாரம் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ராங்கி - சிராக் ஜோடி 18-21, 21-18, 21-14 என்ற செட் கணக்கில், இந்தோனேசி யாவின் லியோ - மவுலானா ஜோடியை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறி யது. ஒரே நாளில் 5 இந்தியர்கள் வெளியேற்றம் இந்தோனேசியா ஓபன் பேட்மி ண்டன் தொடரின் முதல் நாளில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, ராங்கி - சிராக் ஜோடி மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரனோய், லக்சயா சென் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் அனுபாமா, ரக்சிதா, மாள்விக்கா என ஒரே நாளில் 5 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிரெஞ்சு ஓபன் 2025 : சபலென்கா அபாரம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் 124ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா, தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ள சீனாவின் ஜெங்கை எதிர்கொண்டார். இரு வீராங்கனைகளின் அதிரடி ஆட்டத்தால், ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நகர்ந்த நிலையில், இறுதியில் 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் சபலென்கா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இத்தாலி ஜோடி அசத்தல் மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் பவோலினி - எர்ரானி ஜோடி, தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள வெரோனிக்கா (ரஷ்யா) - மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பவோலினி - எர்ரானி ஜோடி 6-2, 6-3 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
ஜூலை 5ஆம் தேதி “நீரஜ் சோப்ரா கிளாசிக்” சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி
இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் காரணமாக கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்ட “நீரஜ் சோப்ரா கிளாசிக்” சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி ஜூலை 5ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்தனர். இதுதொடர்பாக போட்டி ஏற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில்,”இந்தியாவின் முதல் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியை நடத்த முதலில் மே 24ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் காரணமாக ஜூலை 5 ஆம் தேதி பெங்களூருவில் நடை பெறுகிறது. இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் ஜேஎஸ்டபிள்யு (JSW) ஸ்போர்ட்ஸுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு இந்திய தடகள கூட்டமைப்பால் (AFI) இந்த தொடர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் 12 பேர் பங்குபெறும் இந்த நட்சத்திரப் போட்டியில், உல கின் சிறந்த ஈட்டி எறிதல் வீரர்கள் ஏழு பேரும், சோப்ரா உட்பட 5 இந்தியர் களும் பங்கேற்கின்றனர்” என அவர் கூறி னார். ஆனால் பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் இந்த தொடரில் பங்கேற்பாரா? என்பது தொடர்பாக “நீரஜ் சோப்ரா கிளாசிக்” போட்டி ஏற்பாட்டாளர்கள் எதுவும் கூறவில்லை.