tamilnadu

ஒன்றிய போக்குவரத்து துறை அமைச்சருக்கு பொதுமக்களின் கையெழுத்து பட்டியல்

ஒன்றிய போக்குவரத்து துறை அமைச்சருக்கு    பொதுமக்களின் கையெழுத்து பட்டியல்

சுரங்கப் பாதை  அமைக்க கோரி

கணியாகுளம் வட்டார மக்கள் மன்றம் சார்பில். ஞாயிறு மாலை 4 மணிக்கு கன்னியாகுளம் சந்திப்பில் வைத்து நான்கு வழி சாலையில் சுரங்கப் பாதை  அமைக்க கோரி ஒன்றிய அரசு போக்குவரத்து துறை அமைச்சர்  நிதின் கட்கரிக்குபொதுமக்களிடம் பெற்றுள்ள 5000 கையொப்பம் பட்டியலை அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. அப்பகுதி முதியவர் பூதலிங்கம் பிள்ளை தலைமை வகித்தார். மன்ற நிர்வாகி குமாரசாமி வரவேற்புரை நிகழ்த்தினார் பொருளாளர் நீலேஷ் குமார் நிகழ்ச்சியைஒருங்கிணைத்தார். ஆலம்பாறை கணியாகுளம் பார்வதிபுரம் சானல் பிரதான சாலை  நான்கு வழி சாலையில் கடக்கும் இடத்தில் சுரங்க பாதை அமைக்க கேட்டு இதுவரை மத்திய மாநில அரசுகளிடம் முறையிட்டது சம்பந்தமாகவும், மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிப்பது சம்பந்தமாகவும் தகவல்கள் அனைத்தும் மன்றத்தின் தலைவர்  மலைவிளை பாசி விளக்கி பேசினார்.  தேசிய நெடுஞ்சாலை துறையின்  மத்திய போக்குவரத்து  அமைச்சர் கவனத்திற்கு  பொதுமக்களிடம் நாம் பெற்ற 5000 கையொப்பம்  பட்டியலை அனுப்புவதுடன் தேவைப்பட்டால் மதுரை பிராந்திய அலுவலகத்தில் சென்றதைப் போல்  டெல்லி அமைச்சர் அலுவலகத்தில் நேரடியாக சென்று கோரிக்கை மனு கொடுப்பதற்கும் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும் எனவும் பேசினார். அந்த ஆலோசனையை அனைத்து உறுப்பினர்களும் பெரியோர்களும்  வரவேற்றனர். ஆறுமுகம் பிள்ளை நன்றி கூறினார். பொன்ஜெஸ்லி கல்நி நிர்வாகம் 1000க்கும் அதிகமான கையொப்பம் திரட்டி தந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.