பெரம்பலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்
பெரம்பலூர், செப். 8- பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 12 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.16,800 மதிப்பில் ஓய்வூதியம் மற்றும் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகைக்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்னர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 287 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.