செம்பனார்கோவிலில் மக்கள் குறைதீர் முகாம்
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சாநகரம் கிராமத்தில் மேலையூர், கரு வாழக்கரை, கஞ்சாநகரம் ஆகிய ஊராட்சி களுக்கான மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம். முருகன் தலைமை வகித்தார். நிவேதா எம். முருகனிடம் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ., பொது மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். செம்பனார்கோவிலில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் முடிகண்ட நல்லூர், காளகஸ்திநாதபுரம், செம்பனார் கோயில் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்கள் குறைதீர்க்கும் முகாமில் எம்எல்ஏ நிவேதா முருகன், பல்வேறு கோரிக்கைகள் தொடர் பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த கொன்னையூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 563 பயனாளிகளுக்கு ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வழங்கினார்.
225 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட மாவிலங்கை கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், தலை மையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் புதன்கிழமை நடை பெற்றது. இதில், மொத்தம் 225 பய னாளிகளுக்கு ரூ.1,67,94,732 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி யர் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுக் களை பெற்றுக் கொண்டார். முன்னதாக அரசின் திட்டங் களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.