tamilnadu

img

ஆசிரியை ரமணி கொல்லப்பட்ட பள்ளியில் மனநல ஆற்றுப்படுத்துதல் ஆலோசனை

தஞ்சாவூர், நவ.25 -  பேராவூரணி அருகே மல்லிப்பட்டி னம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி கத்தியால் குத்திக்  கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து,  பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்களுக்கு மன நல ஆலோசனை மருத்துவ அலுவலர்களால் வழங்கப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டி னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 20 ஆம் தேதி தற்காலிக ஆசிரி யர் ரமணி என்பவர் அவரது காதலன்  மதன்குமாரால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.  இதையடுத்து, ஆசிரியை ரமணியின் வீட்டிற்கு வந்துவிட்டு, மல்லிப்பட்டினம் பள்ளியில் ஆசிரி யர்கள் மாணவர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஸ் பொய்யாமொழி பள்ளிக்கு  உடனடியாக விடுமுறை அளிக்கப்ப டும் எனவும், ஆசிரியர்கள், மாணவர் களுக்கு மனநல ஆலோசனை வழங்கப் பட்ட பின்னர், வேறொரு தேதியில் பள்ளி திறக்கப்படும் எனவும் அறிவித்தார்.  அதன்படி, திங்கட்கிழமை மல்லிப்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் காலை 10.30 மணி அளவில் மாணவர்களுக்கும் - ஆசிரியர்களுக்கும் மருத்துவர்கள் மூலம் மனநல ஆலோசனை வழங்கும் பணி துவங்கி நடைபெற்றது. இந்த நிகழ்வில் 522 மாணவ, மாணவிகளும், 22 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரி யர்கள், மாணவர்களுக்கு மாவட்ட மனநல மருத்துவர் சித்ரா தேவி,  பட்டுக்கோட்டை மனநல மருத்துவர் மங்கையர்கரசி, மனநல ஆற்றுநர் சுபாஷ், சமூக ஆர்வலர் சுகந்தி  ஆகியோர் உளவியல் ஆலோசனை கள் வழங்கிப் பேசினர். மேலும், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு  மன இறுக்கத்தை போக்க மன விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர்.  இதில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், சேது பாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மு.கி.முத்து மாணிக்கம், மீனவர் நலவாரிய துணைத் தலைவர் தாஜுதீன், சேது பாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் நாகேந்திரன், சடையப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோ.கிருஷ்ணமூர்த்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவி ரஹ்மத்நிஷா, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், கிராமத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.