tamilnadu

img

வீட்டுமனை பட்டா வழங்குக! நரியூத்து கிராம சபையில் தீர்மானம்

கடமலைக்குண்டு, நவ.1- உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம், கடமலை -மயிலை ஒன்றியம், நரியூத்து ஊராட்சி சார்பில்  கிராம சபைக் கூட்டம் நரியூத்து கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் தங்க பாண்டியன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ஜெயராஜ் கிராமங்களில் நடந்து வரும் வளர்ச்சிப் பணி கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே எடுத்துரைத்தார். இதில் நரியூத்து ஊராட்சி களில் வனப்பகுதிகளை தவிர்த்து பல ஆண்டுகளாக பட்டா  இல்லாமல் தொடர்ந்து குடியிருந்து வரும் பொது மக்க ளுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து சிறப்பு தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.  மேலும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண் வரப்பு, தடுப்பணை கட்டுதல் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில்  சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மற்றும் அரசு ஆசிரி யர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இதேபோல பாலூத்து கிராமசபைக் கூட்டம் சமுதாயக்  கூடத்தில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப் பிரியா உதயகுமார் தலைமை வகித்தார். ஊராட்சி செயலா ளர் சேகர் கிராமத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணி கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். பாலூத்து ஊராட்சிக்குட்பட்ட பாலூத்து,

கொம்புக்காரன்புலியூர், தேவராஜ் நகர் ஆகிய கிராமங்களில் அதிகரித்து வரும் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து கிராம சபை கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு  அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  கடமலைக்குண்டுவில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம்  தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் துரை பாண்டி யன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொதுமக்களிடம் கூறினார். இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மயிலாடும்பாறை யில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி அன்பில் சுந்தர பாரதம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ஆங்கன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்  ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஆதரவற்றோர் பனிமலர்  என்பவரை நியமிக்க கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.