தூத்துக்குடி, நவ.15 - டிஎம்பி தனது 103 ஆவது நிறுவன தினத்தை ஜோஹோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறு வனர் பத்மஸ்ரீ டாக்டர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் திருநெல் வேலி செய்யது குழும நிறுவ னங்களின் தலைவர் டி.இ.எஸ். பாத்து ரப்பானி ஆகியோர் முன்னிலையில் கொண்டாடி யது. தூத்துக்குடி ஏவிஎம் கமலவேல் மஹாலில் லட்சு மண் ஸ்ருதி, இன்னிசை நிகழ்ச்சியை தொடங்கினர். புதிய சேவைகள் குறித்து அறி முகப்படுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப் பட்ட கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து தமிழ்நாடு மெர்க்கண் டைல் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “எங்கள் 103 ஆவது நிறுவன தினம் தூத்துக்குடியில் வியாழனன்று கொண் டாடப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜோகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் கௌரவ விருந்தி னராக திருநெல்வேலி செய்யது குழும நிறுவனங்களின் தலைவர் டி.இ.எஸ் பாத்து ரப்பானி கலந்து கொண்டனர். எக்ஸ்கூட்டிவ் வைஸ் பிரசிடெண்ட் பி.ஆர்.அசோக்குமார் வரவேற்றார். இதில் தலைமை விருந்தினர் டாக்டர் ஸ்ரீதர் வேம்பு, வங்கியின் புதிய தயா ரிப்புகளை அறிமுகப்படுத்தி பேசியும், கட்டுரை, பேச்சு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தென் தமிழகத்தின் பாரம்பரிய அடை யாளங்களில் ஒன்றாகவும், 1921 ஆம் ஆண்டு முதல் வணிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கியும் வருகிறது” என்றார். டிஎம்பி நிறுவன தின கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக, பல சமூக நல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில், ரத்த தான முகாம்கள் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப் பட்டன. இந்த முகாம்கள் மூலம் சுமார் ஆயிரம் பேர் பயனடைந்தனர். வங்கி பல்வேறு பள்ளிகள், ஆதர வற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் தேவைப்படும் ஏழை நபர்களின் வாழ்வாதாரத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி யுள்ளது.
வங்கி நிறுவன நாள் கொண்டாட் டத்தையொட்டி, தூத்துக்குடி மற்றும் பிற மூன்று மண்டலங்களில் சிறப்புக் கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டு ரூ.103 கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டன. நிறுவனத்தின் எம்.டி மற்றும் சிஇஓ-வான சலீ ஆற்றிய உரையில், வைப்பு நிதியை வலுப்படுத்துவதிலும், கடன் வழங்குவதை மையப்படுத்துவதிலும், வாடிக்கையாளர்களுக்கு தனிக் கவ னத்துடன் கூடிய சேவையை வழங்கு வதிலும் வங்கி கவனம் செலுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர மொழி (Machine Learning) அடிப்படையி லான தொழில் நுட்பங்களை வங்கி சேவையில் படிப்படியாக செயல்ப டுத்துவோம். நடப்பு நிதியாண்டில் 40 புதிய கிளைகள் திறக்கப்படும்” என்றார். எக்ஸ்கூட்டிவ் வைஸ் பிரசிடெண்ட் ஜெ.சுந்தரேஷ் குமார் நன்றி கூறினார். நிறுவன தின விழாவில் எம்.டி மற்றும் சிஇஓ, இயக்குநர்கள் குழு, எக்ஸ்கூட்டிவ் டைரக்டர், எக்ஸ்கூட்டிவ் வைஸ் பிரசிடெண்ட்கள், தலைமை நிதி அதிகாரி, நிறுவன இயக்குநர்களின் குடும்ப உறுப்பினர்கள், வணிக கூட்டா ளிகள், பங்குதாரர்கள், வாடிக்கை யாளர்கள், ஊடக நண்பர்கள், ஊழி யர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு பெயர் பெற்ற பழமையான தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கிவரும் இந்த வங்கி, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கை யாளர் சேவையிலும் அதன் கோட்பாடு கள் மற்றும் வரைமுறைகளிலும் போற்று தலுக்குரிய சரித்திரம் படைத்து வரு வதோடு, தொடர்ந்து லாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழு வதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 567 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமார் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக் கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது. இதை மையமாகக் கொண்டு, வங்கி தனது வாடிக்கையாளர்களின் வசதிக் கேற்ப எளிதாக அணுகுவதற்கு தனது தயாரிப்புகளையும் வடிவமைத்து வரு கிறது. அனைத்து வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறை யால், வங்கி அதன் 103 ஆண்டு பய ணத்தில் தொடர்ந்து லாபம் ஈட்டி வரு கிறது.