tamilnadu

img

பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ரெத்தினகோட்டையில் ஆர்ப்பாட்டம்

பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ரெத்தினகோட்டையில் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, மே 6 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங் கியை அடுத்த ரெத்தினகோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறந்தாங்கி தாலுகா குழு சார்பாக வருவாய்த் துறை நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி ரெத்தினகோட்டை கிளைச் செய லாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித் தார். ரெத்தினகோட்டையில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள்  பலமுறை மனு கொடுத்தும், எந்த நட வடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்யும் வருவாய் ஆய்வாளர் மதியழ கன், பலமுறை முறையிட்டும் கண்டு கொள்ளாத அறந்தாங்கி வருவாய் வட்டாட்சியர் ஆகியோரின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.கவிவர்மன், மாதர்  சங்க மாவட்டத் தலைவர் பாண்டிச் செல்வி, மாவட்டச் செயலாளர் சுசிலா, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக் குழு  உறுப்பினர்கள் கே.தங்கராஜ், தென்றல்  கருப்பையா, ஒன்றியச் செயலாளர் நாராயணமூர்த்தி, சிஐடியு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கர்ணா, கவிஞர் கவி பாலா ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.  ரெத்தினகோட்டை கிராமத்தில் பல தலைமுறையாக நூற்றுக்கும் மேற் பட்ட குடும்பங்கள் வீடு கட்டி குடி யிருந்து வரும் நிலையில், அனுபவத்தி லும் சுவாதீனத்திலும் உள்ள தரிசு மற்றும் ஆயக்கட்டு இல்லாத பகுதி களை களஆய்வு செய்து வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.  கடைத்தெருவில் இருந்து பள்ளி வாசலை சுற்றி குண்டு குழியுமாக உள்ள ஊருக்குள் செல்லும் சாலைகளை  போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி  தார்ச்சாலையாக செப்பனிட வேண்டும். ரெத்தினகோட்டை பூமாரியம்மன் கோயில் குடியிருப்பு பகுதி மக்களின்  பயன்பாட்டிற்கு ரைஸ் மில் அருகே  பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும்.  ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.