சாம்சங் தொழிற்சாலையில் 3 தொழிலாளர்களின் பணி நீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சுங்கு வார் சத்திரத்தில் குடும்பத்துடன் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜனவரி 27 அன்று ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்ற பெயரிலேயே தொழிற்சங்கம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. இதை யடுத்து, கோரிக்கைகள் நிறை வேற்றப்பட்டு பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஆனால் ஊழியர்கள் மீது பழி வாங்கும் நடவடிக்கைகளில் சாம்சங் நிர்வாகம் ஈடுபட்டதால், மீண்டும் போராட்டம் நடைபெறுகிறது. பழிவாங்கும் நிர்வாகம் சட்டப் பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கும் ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க’த்தை சாம்சங் நிறுவனம் அங்கீகரிக்காமல், அதில் இருப்பவர்களை நிர்வாகம் சார்பாக உருவாக்கப்பட்ட ‘ஊழியர் கமிட்டி’யில் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறது. தனிப்பட்ட முறையில் ஊழியர்களை அச்சுறுத்தியும், ஆசை காட்டியும் தொந்தரவு செய்து வருகிறது. இந்தச் சூழலில் ‘எச்.ஆர்’ ஊழியர்களின் பணிநீக்க, மன அழுத்த நடவடிக்கைகள் குறித்தும் ஊழியர் கமிட்டியின் அடாவடியான செயல்பாடுகள் குறித்தும் சாம்சங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரி டம் புகாரளித்துப் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கேட்டனர் சாம்சங் ஊழியர்கள்.
ஜன.31 அன்று நிர்வாக இயக்குநரைச் சந்திக்க நேரம் ஒதுக்கி யிருக்கின்றனர். ஆனால், அன்றைய தினம் உணவு இடைவேளையின் போது நிர்வாக இயக்குநரைச் சந்திக்கத் தொழிலாளர்கள் ஒன்றி ணைந்து சென்றபோது, காத்திருக்கச் செய்து விட்டு சந்திக்க விடாமலேயே திருப்பி அனுப்பியுள்ளனர். இந்நிலையில் பிப்ரவரி 5 அன்று, தொழிற்சங்கத்தின் முன்னணி தலை வர்கள் மோகன்ராஜ், சிவநேசன், குணசேகரன் ஆகிய மூன்று பேரை யும் பணியிடை நீக்கம் செய்திருக் கிறது சாம்சங் நிறுவனம். அடுத்தடுத்து ஊழியர்கள் பலரையும் அதேபோல் பணியிடை நீக்கம் செய்யத் திட்ட மிட்டிருப்பதாக சாம்சங் ஊழியர்கள் அச்சப்படுகின்றனர். வெடித்தது போராட்டம் சாம்சங் நிறுவனத்தின் இந்தப் பழி வாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து பிப்ரவரி 5 முதல் கடந்த 12 நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் சாம்சங் நிறு வனத்தில் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையில், தொழி லாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்படவில்லை.
போராட்டத்தைக் கலைக்க மின்சார துண்டிப்பு, போராடும் இடத்தில் கழிவறைக்கு பூட்டு போடுவது என நிறுவனம் அராஜ கங்களை செய்து வருகிறது. நிறுவ னத்தின் உள்ளே போராடுவது வெளி யில் தெரியக் கூடாது என்பதற்காக நிறுவனத்தின் வெளியே பேருந்து களை வைத்து மறைத்தும், ஊடகத் திற்கு அனுமதி மறுத்தும் வருகின்ற னர் நிறுவனத்தினர். இதனால், திங்களன்று போராடும் சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக அவர்களது குடும்பத்தினர் ஸ்ரீபெரும் புதூர் சுங்குவார் சத்திரம் பஜார் பகுதியில் போராட்டத்தை முன்னெ டுத்துள்ளனர். “நிறுவனம், ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க’த்தை ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்க வேண்டும். ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யக் கூடாது” என்ற கோரிக் கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கை குழந்தைகளு டன் ஆண்களும் பெண்களும் திரளாக பங்கேற்றனர். சங்கத்தின் தலைவர் இ.முத்துக் குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் ஸ்ரீதர், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.நேரு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.