tamilnadu

img

ஒன்றிய அமைச்சருக்கு எதிராக பிப்.25-இல் போராட்டம்

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக பிப்ரவரி 25  ஆம் தேதி மாணவர் இயக்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து  மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக் கிழமை மாணவர் இயக்கங்களின் கூட்டமைப் பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மதத்தின் பெயரால் பிற் போக்குச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக  அரசின் சதி திட்டத்தை முறியடிக்க பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், ஒன்றிய கல்வி அமைச்சரின் ஆணவப் பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கோரி, தமிழ் நாட்டின் கல்வி நிதியை வழங்கும் வரை  மாநிலம் முழுவதும் தொடர் மாணவர் போராட் டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக் கொண் டால்தான், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்விக்கான நிதியை தருவோம் என பாஜக வின் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர  பிரதான் ஆணவத்தோடு பேசியிருக்கிறார். கல்வி, மருத்துவம், சுகாதாரம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளி லும் முன்னேறிய மாநிலமாக, தமிழ்நாடு விளங்குவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய பாஜக அரசு, தன்னால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லையே என்ற வெறுப்புணர்வோடு தமிழ்நாட்டு மக்க ளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொ டர்ந்து ஈடுபட்டு வருகிறது. கல்விதான் தமிழ்நாட்டின் இந்த உயரிய  நிலைக்கு காரணம் என்பதை அறிந்து, அதை  சிதைக்க வேண்டுமென்ற உள்நோக்கத் தோடு பாஜக அரசு கல்வித் துறைக்கு வழங்க  வேண்டிய நிதியை தர மறுத்து, “இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழ்நாடு அரசுக்கு நிதி வழங்குவோம்” என பாஜகவின் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியிருக்கிறார்.

அவர் குறிப்பிடுவது, சட்டமேதை டாக்டர்  அம்பேத்கர் வகுத்த அரசமைப்புச் சட்டத் தையா? அல்லது மனுதர்ம சட்டத்தையா? என்ற கேள்வி எழுகிறது. கூட்டாட்சி தத்து வத்தையும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையையும் சிதைக்கும் வகையில்,  சட்டத்திற்கு புறம்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் பேசியதற்கு கடும் கண்டனம் தெரி விப்பதோடு மொழிப்போருக்கு வித்திடும் வகையில் செயல்படும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, பிப். 25 அன்று தமிழ்நாடு  முழுவதும் அனைத்து மாவட்டத் தலை நகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்துவது என மாணவர் இயக்கங்க ளின் கூட்டமைப்பு தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.