பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க நிர்வாகிகள் அவமதிப்பு
ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர் சங்க நிர்வாகிகளை அவமதித்த பெரம்பலூர் ஆட்சியரைக் கண் டித்து அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக தமிழ் நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் வாழ் வாதார கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவ லர்கள் சங்க மாநில நிர்வாகிகள் மற் றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ் கரன் உள்ளிட் டோர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறை யீடு அளிப்பதற்காக ஆட்சியர் அலு வலகம் சென்றுள்ளனர். அவர்களி டம், அநாகரிகமான வார்த்தைக ளைப் பிரயோகித்து ஆட்சியர் கிரேஸ் லால்ரின் டிகி பச்சாவ் அவமதித் துள்ளார். கோரிக்கை மனுக்களை, நாகரிகமின்றி மாநில நிர்வாகிகள் முன்னிலையிலேயே கசக்கி குப் பைத் தொட்டியில் வீசி, வெளியே செல்லுமாறு மிரட்டும்தோணியில் பேசியுள்ளார். ஜனநாயக விரோதப் போக்கோ டும், ஊழியர் விரோதப் போக்கோ டும் செயல்பட்ட பெரம்பலூர் ஆட்சி யர் மீதும், மாநில நிர்வாகிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்திய பெரம்பலூர் காவல் துறை மீதும் தமிழக அரசு விசாரணை மேற் கொண்டு, விரைவில் உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். அநாகரிக செயலுக்கு பெரம்பலூர் ஆட்சியர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ கம் முழுவதும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் செவ்வா யன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக, சேலம் ஊராட்சி ஒன்றியம் அயோத்திய பட்டினம், காடையாம்பட்டி, பெத்த நாயக்கன்பாளையம், ஏற்காடு, ஓம லூர், ஆத்தூர், வாழப்பாடி, தலை வாசல், மேட்டூர், நங்கவள்ளி உள் ளிட்ட 20 ஊராட்சி ஒன்றிய அலுவல கங்கள் முன்பாக கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் பு.சுரேஷ் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ந. திருவரங்கன் செயலா ளர் ஜான் ஆஸ்டின், தலைவர் செந் தில்குமார், பொருளாளர் வடிவேலு உள்ளிட்டு நிர்வாகிகள் பங்கேற்ற னர். இதேபோன்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேலம் ஆட் சியர் அலுவலக வளாகத்தில் புத னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சங்கத்தின் வட்டக்கிளைத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செய லாளர் பு.சுரேஷ், மாவட்டத் தலை வர் ந.திருவேரங்கன், மாவட்டப் பொருளாளர் சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் வெ.அர்த்தநாரி, திரு நாவுக்கரசு, ராணி, வட்டக்கிளைச் செயலாளர் ஸ்ரீபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி இதேபோன்று தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ் நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலை வர் மு. முகமது இலியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட தணிக்கையா ளர் எஸ். கார்த்திக், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் தேன் மொழி, வட்டச் செயலாளர் கே. பாலாஜி, ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அணைத்து ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கே. கேச வன், வாழ்த்தி பேசினர். இதே போல், நல்லம்பள்ளியில் மாநில துணைத்தலைவர் சா. இளங்கும ரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மாவட்டப் பொருளாளர் கே. வினோத்குமார், பென்னாகரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம். சுருளிநா தன், அரூரில் மாநில செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.