ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 இல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இம்முறை பாஜக தலைமையிலான கூட்டணி அரசின் பட்ஜெட். இது வெறும் வரவு செலவு அறிக்கை மட்டுமல்ல, அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அரசியலையும் எடுத்து கூறுவது. 2019 போல 303 இடங்கள் தற்போது கிடையாது. 240 இடங்களை மட்டுமே கொண்டுள்ளது. கூட்டணி அரசியலையும் பிராந்திய கூட்டணி கட்சிகளின் அபிலாசை களையும் பாஜக புறக்கணிக்க முடியாது. 2019- 24 வரை அதனுடைய இரண்டாவது ஆட்சியில் பின்பற்றிய தவறான பொரு ளாதாரக் கொள்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பையும் அதற்கு எதிரான கருத்து வேறுபாடுகளையும் புரிந்து கொண்டு இந்த பட்ஜெட்டில் அதனை மாற்ற வேண்டும். 2014,2019 தேர்தல்களில் உணர்ச்சியை தூண்டும் பிரச்சாரங்களை போல் அல்லாமல் 2024 தேர்தலில் மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சனை குறித்த விவாதம் முன்னுக்கு வந்தது. தீர்ப்பிலும் அதுவே எதிரொலித்தது. வாக்காளர்கள் கடந்த அரசாங்கத்தின் மீதான ஏமாற்றத்தை மிகவும் திறம்பட வெளிப்படுத்தியிருக்கின்றனர். எனவே இந்த பட்ஜெட் மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது.
வேலை வாய்ப்புகள்- முக்கியப் பிரச்சனை
வேலையின்மை, பணவீக்கம் பற்றிய கவலையும் சமூகநீதி மற்றும் பொருளாதார நீதி பற்றிய விவாதங்களும் கணிசமாக ஆதிக்கம் செலுத்தியது.ஒரு குறிப்பிட்ட பொருளாதார நிலைப்பாட்டில் இருந்து நேரடியாகவோ அது மறைமுகமாகவோ வேலைவாய்ப்புகள் குறித்து எழுப்பப்படும் கேள்வி மையப்படுத்தப்படுகிறது. பட்ஜெட் இந்த கேள்வியை எப்படி பிரதிபலிக்கும்? வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அர சாங்கத்திற்கு முன்னுரிமை அல்ல என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்ட சிக்காகோ ஸ்கூல் ஆப் சிந்தனைக்கு ஏற்ப ஆளும் வர்க்கத்தின் விசுவாசிகள் தங்களின் ஆக்ரோஷமான எதிர்ப்பை ஏற்கனவே பதிவு செய்துள்ளார்கள். கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தின் திட்ட ஒதுக்கீடுகளில் கடந்த ஆண்டுகளில் இது தெளிவாகவே வெளிப் பட்டது. இந்த பட்ஜெட்டிலாவது இதற்குரிய நிதி ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப் பட வேண்டும்.
நவீன தாராளமயம் தோல்வி!
தனியார் துறை அல்லது சந்தைப் பொரு ளாதாரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதில் தோல்வி அடைந்தது என்பதைதான் இந்த வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டங்கள் நிரூபிக்கின்றன. இந்திய பொரு ளாதார கண்காணிப்பு மையம் (Center For Monitoring Indian Economy), ஐஎல்ஓ (ILO) மற்றும் மனித வளர்ச்சிக்கான நிறு வனம் வேலைவாய்ப்பு சந்தைகளில் தீவிர மாக தலையிட்டு அக்கறை காட்டியுள்ளன. மேல்நிலை பள்ளி கல்விக்கு மேல் குறிப்பாக படித்த இளைஞர்களிடையே (வயது 15 முதல் 19 வரை) மிக அதிகமாக வேலையின்மை நிலவி வருவதை இவற்றின் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. முறைசாராத மற்றும் தரம் குறைவான (Informal and under employment) வேலைவாய்ப்புகளின் கார ணமாக வருமானமும் சுருங்கியது. மறுபுறம் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் சமூக ஆர்வ லர்களின் தலையீடுகளின் உதவியால் ஓரளவுக்கு வருமானம் பெறுகின்றனர். தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது.ஆனால் அது ஊதியம் பெறாத குடும்ப உழைப்பு மற்றும் வீட்டு வருமானத்திற்கு துணை புரியும் செயல்பாடுகளாகவே உள்ளது. ஆனால் இதனை உருவாக்கும் கட்ட மைப்பு நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது. அமைப்புசாரா துறை குறிப்பாக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME - Micro , Small and Medium Enterprises)சுருங்குவதால் முதன்மை துறைகளில் (விவசாயம், மீன்பிடி, சுரங்கங்கள் மற்றும் உற்பத்தி)வேலை வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இரண்டாம் நிலை (உணவு, கச்சா பொருள்,ஜவுளி உற்பத்தி போன்ற துறைகளில்) குறைந்து வருகிறது.
மூன்று காரணங்கள்
எம்எஸ்எம்இ (MSME) துறை சுருங்கு வதற்கு மோடி ஆட்சியின் பிரதான குளறுபடி களான பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கோவிட் 19 பொதுமுடக்கம் ஆகிய மூன்றும் முக்கிய காரணங்கள். எனவே இந்த பட்ஜெட்டில் இந்த துறைக்கு கூடுதல் கவனம் தேவை. கடந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு, திறன் விரிவாக்கத் (CAPEX)திட்டங்கள், ஸ்டார்ட் அப் கடன் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்குவ தற்கு கூடுதல் நிதிக்கான கவனம் செலுத் தப்பட்டன. உயர் மதிப்பை உருவாக்கக் கூடிய செயல்பாடுகள் மற்றும் வழங்கல் (Supply side)சார்பு கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அதிக மதிப்புள்ள உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் அந்நிய நேரடி முதலீடுகள், ஏற்றுமதி சார்ந்த எம்எஸ்எம்இ -க்கு இதுவரை முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. இந்த கருத்தாக்கத்தில் மாற்றம் வேண்டும். வளர்ச்சி என்பது வளர்ச்சிக்காக மட்டும் அல்லாமல் வேலை வாய்ப்பையும் உருவாக்க வேண்டும்.
சமூக மற்றும் பொருளாதார நீதி வெற்றுக் கோஷமல்ல!
குறைவான வருமானம் கொண்ட மக்க ளின் நுகர்வுக்கு உதவும் எம்எஸ்எம்இ- களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு இது பெரிதும் பலன் அளிக்கும்.மனித வளர்ச்சி குறியீடு மற்றும் பல பரிமாண வறுமைக் குறியீடு ஆகியவை உறுதிப்படுத்தும் மோசமான செயல் திறனை கருத்தில் கொண்டு கல்வி,சுகாதாரம் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர்களுக்கான வீட்டு வசதி ஆகியவற்றில் இந்த பட்ஜெட்டில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கோடு ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். இந்தியா ஐந்தாவது பெரிய பொருளா தாரமாக மாறி உள்ளது. விரைவில் மூன்றா வது இடத்தையும் பிடிக்கும் என கூறப்படு கிறது. ஆனால் இங்கே காணப்படும் வேலை யின்மையும் மோசமான தரமுடைய வேலை வாய்ப்புகளும் அதை பொய்யாக்குகின்றன. 1990களில் இருந்து இதுதான் நிலைமை. புதிதாய் பொறுப்பேற்றுள்ள மோடியின் கூட்டணி அரசு இதுகுறித்து மறுபரிசீல னை செய்ய வேண்டும். வெற்று விளம்பரங்க ளும் வாண வேடிக்கைகளும் பலன் அளிக் காது. எதிர்வரும் பட்ஜெட்டில் அர்த்தமுள்ள மாற்றம் வரும் என நம்பலாமா?