tamilnadu

img

தன்னிச்சையாக நடந்து கொள்ளும் தனியார் நிறுவனங்கள் பால் விலை திடீரென லிட்டருக்கு ரூ.2 உயர்வு

மக்கள் அதிர்ச்சி! சென்னை, நவ. 8 - தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.8) முதல் தனியார் பால் விலை  லிட்டருக்கு ரூ. 2 வரை உயர்ந்துள்ளது.  எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென அறிவிக்கப்பட்ட இந்த விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  குறிப்பாக ஆரோக்யா பால் நிறு வனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை யின் அடிப்படையில் 500 மி.லி. நிறை கொழுப்பு பால் பாக்கெட் ஒன்று, நவம்பர் 8-ஆம் தேதி முதல், ரூ. 36-லிருந்து ரூ. 37 எனவும், ஒரு லிட்டர் பாக்கெட் ரூ. 65-இலிருந்து ரூ. 67 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல 500 மி.லி. நிலைப்படுத் தப்பட்ட பால் ரூ. 31 லிருந்து ரூ.32  எனவும், ஒரு லிட்டர் ரூ. 58 லிருந்து ரூ.60  ஆகவும், 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ. 30 லிருந்து ரூ. 32  ஆகவும், 500 கிராம் தயிர் பாக்கெட் ரூ. 37-லிருந்து ரூ. 38 ஆகவும், 1 லிட்டர் தயிர் பாக்கெட் ரூ. 66-லிருந்து ரூ. 68 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.  அதாவது, பால் மற்றும் தயிரின் விலை சராசரியாக லிட்டருக்கு 2 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பால் சார்ந்த உணவுப் பொருட்கள் அனைத்துமே விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.  எதனடிப்படையில் இவ்வாறு விலை உயர்த்தப்பட்டுள்ளது, விலை உயர்த்தப்படுவதற்கான காரணம் என்ன என்பது தெளிவாக்கப்பட வில்லை. மூலப்பொருட்களின் விலைகள் எதுவும் பெரிதாக உயராத நிலையில், பால் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்தியிருப்பதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழி லாளர் நல அமைப்புகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. தனியார் பாலை விட, ஆவின் பால்  விலை குறைவு. எனினும், ஆவின் பாலைக் காட்டிலும் தனியார் நிறு வனங்கள் தான் அதிகமான பாலை- சுமார் 1 கோடியே 50 லட்சம் லிட்டர் அளவிற்கு பால் பாக்கெட்டுக்களை விற்பனை செய்து வருகின்றன. எனவே, லிட்டருக்கு ரூ. 2 விலை  உயர்வு, தமிழக மக்களை கடுமை யாகப் பாதிக்கக்கூடியதாகும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த விலை உயர்வை, தனி யார் நிறுவனங்கள் ஒவ்வொரு முறை யும் தன்னிச்சையாகவே செய்து வரு கின்றன. மக்களைப் பாதிக்கும் இந்த விஷயத்தில் அரசும் பெரிதாக தலை யிடாத நிலை உள்ளது. தனியார் நிறுவனங்கள் பால்  விலையை இஷ்டத்திற்கு தன்னிச்சை யாக உயர்த்துவதைத் தடுக்க, வரை முறைப்படுத்த பாலுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்யும் வகையில் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்கு முறை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கையாகும். எனவே, தனியார் நிறுவனங்கள் அவசர அவசரமாக பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ள நிலையில், தமிழக அரசு தலையிட வேண்டும், விலை உயர்வைத் திரும்ப பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.