சென்னை, பிப். 3 - பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் திமுக வினர் அமைதி பேரணி நடத்தினர். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரை முருகன், மா. சுப்பிரமணியன், எம்.பி.க்கள் ஆ. ராசா, டி.ஆர். பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
முன்னதாக, ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்!’ என்ற தலைப்பில் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்! என்று குறிப்பிட்டுள்ளார்.