tamilnadu

img

மூன்றாம் உலகப்போர் மூளாமல் தடுத்திடுங்கள்! - வி.பி.கலைராஜன்

இந்த நூற்றாண்டின் இரண்டாவது ஹிட்ல ராக திகழ்கிறார் இஸ்ரேல் பிரதமர் நேதன் யாகு. இவரது செயல்பாட்டால் இஸ்ரேல்  மக்களால் ஒரு கட்டத்தில் அரசியலில் புறக்கணிக் கப்பட்ட நிலையில் இருந்தவர் தான். ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின் இஸ்ரேல் மக்களை தான் மட்டுமே காக்க முடியும் என்று கருணையற்ற கடுமையான போரை பாலஸ்தீனர்கள் மீது தொ டுக்கத் தொடங்கினார். சோவியத் யூனியன் உடைந்த நிலையில் ரஷ்யா தனது முழு கவனத்தையும் உக்ரைன் போரில் காட்டி வருகிறது. சீனா மிகப்பெரிய வல்ல ரசாக திகழ்கின்ற போதும் தைவான் ஹாங் காங்கை எப்படி தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்தி ருப்பது, இந்தியா ஏமாந்தால் எப்படி அதன் எல்லை க்குள் புகுந்து நிலங்களை ஆக்கிரமிப்பது என்ப தில் மட்டுமே தன் கவனத்தை செலுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தனிப்பெரும் வல்லரசாக திகழ்ந்துவரும் அமெரிக்கா அநியாய, அக்கிரம, அடக்குமுறை மற்றும் மனிதநேயமில்லாத செயல்களை செய்து வரும் இஸ்ரேலைத் தூண்டி விடும் வண்ணம் அந்நாட்டிற்கு கிட்டத்தட்ட 10,000 கோடி டாலருக்கு மேல் அதாவது இந்திய மதிப்பில் 10 லட்சம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை, விமா னங்களை, ட்ரோன்களை மற்றும் வீரர்களை அனுப்பி பாலஸ்தீனர்களைப் படுகொலை செய்திட உதவிவருகிறது.

நாடகத்தின் நாயகன்

இதேபோல் தான் ரஷ்யா - உக்ரைன் நாடுக ளுக்கான போரில் ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு கிட்டத்தட்ட 4800 கோடி டாலர் மதிப்பிலான அதாவது இந்திய பண மதிப்பில் 5 லட்சம் கோடி அளவிலான ஆயுதங்களை, வெடிபொருட்களை, ஏவுகணைகளை, ட்ரோன்களை அனுப்பி உதவி வருகிறது. அதேபோல் ஐரோப்பிய நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு நிதி உதவியாக பல்லாயிரம் கோடி களை வழங்கி வருகின்றன. குறிப்பாக இங்கி லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஜனாதிபதி கள் இஸ்ரேலுக்கு நேரில் சென்று தங்கள் ஆத ரவை தெரிவித்து நேதன்யாகுவை ஊக்கப்படுத்தி உள்ளனர். இப்படி ஒருபக்கம் போருக்குத் துணையாக இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் முழுமையாக நவீன ஆயுதங்களையும் நிதியையும் வாரி வழங்கும் அமெரிக்கா மறுபுறம் இந்தப் போரை உடனே நிறுத்த வேண்டும்; அதற்கு இந்திய பிரதமர் மோடி உதவிட முன்வர வேண்டுமென்று கூறி நாடகம் ஆடிவருகிறது. நாடகத்தின் கதாநாய கனே அமெரிக்கா தான். உண்மையிலேயே அமெரிக்காவிற்கு அக்கறை இருக்குமானால் இந்த பூமியில் அமைதி நிலவி சீரழிவு ஒழிய வேண்டுமென்றால் இஸ்ரேல் பிரதமரிடம் கண்டிப்பாகவும் கடுமையாகவும் கூறி உடனே போரை நிறுத்து, இல்லையேல் அமெரிக்கா இனி உதவாது; உனக்கு எதிராக மாற நேரிடும் என்று அறிவிக்க வேண்டும். அப்படிப்பட்ட அறிவிப்பை அமெரிக்கா வெளியிடாது.  கருவாடு தின்னாத பூனையை எப்படி காண முடியாதோ அதை போல் மக்கள் வடிக்கும் இரத்தத்தையே பார்த்து ரசித்து பழக்கப்பட்ட நாடு தான் அமெரிக்கா. ஜோ பைடன் வயதான காலத்தில்  கூட இப்படி ரத்தவெறி கொண்டவராக இருப்பதை நினைத்தால் வேதனை தான் வருகிறது. மகாத்மா காந்தி இஸ்ரேலை என்றுமே ஆத ரித்ததில்லை. அது அரபு நாடுகளின் மண். அந்த அரபு நாடுகளோடு பேசி சுமூகமாக நட்புறவோடு வேண்டுமானால் இஸ்ரேலில் இருந்து கொண்டு அங்கு யூதர்கள் வாழலாம். தனிநாடு அரபு நாடு களில் ஒன்றான பாலஸ்தீனத்தில் கொடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார். நேருவும் இஸ்ரேலை அங்கீகரித்ததில்லை. இந்திராவும் விரும்ப வில்லை. ஆனால் 1950இல் தான் அங்கீகாரமே கொடுத்தார். நரசிம்மராவ் தான் 1992இல் உறவை இஸ்ரேலுடன் ஏற்படுத்தினார். வாஜ்பாய் காலத்தில் நெருக்கமானது. இதுதான் இஸ்ரே லோடு இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால் இஸ்ரேல் தன்னை ஒரு நாடு என்று அறிவித்த சில நொடிகளில் அமெரிக்கா அதனை அங்கீ கரித்தது. ஆனால் இந்தியா யாசர் அராஃபத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தையே அங்கீக ரித்தது வரலாறு. ஆக எப்போதுமே இந்தியா பாலஸ்தீனத்திற்குத் தான் ஆதரவாகவே இருந்துள்ளது.

மோடியின் நாடகம்

ஆனால் இன்று பிரதமர் மோடியோ இஸ்ரேலுக்கு இந்தப் போர் தொடங்கிய ஆரம்பத் தில் உடனே தனது ஆதரவை தெரிவித்து பிறகு கண்டனங்கள் வர பாலஸ்தீன மக்களுக்கு உணவு வழங்குவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். இஸ்ரேலை பகைத்துக் கொள்ள மோடிக்கு தெம்பில்லையா? துணிவில்லையா? எதற்காக பாலஸ்தீன மக்களுக்காக பரிதாபப்படுவதாக அறிக்கை எப்போதாவது வெளியிடுகிறார். யாரை ஏமாற்ற இந்த அக்கிரம வேலை? இவர் முதல்வராக இருந்து ஆட்சி செய்த குஜராத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு 1200 ஆண்டுகள் பழமையான தர்காவை 50க்கும் மேற் பட்ட புல்டோசர்களைக் கொண்டு பாஜக அரசு இடித்துத் தள்ளியுள்ளது. பிரதமர் மோடி தன் மாநிலத்தில் இந்த வேலையை செய்ய தனது கட்சித் தொண்டர்களை ஏன் அனுமதித்தார்? உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் சாமியார் வேஷம் போட்டுக் கொண்டே குற்ற வழக்கு உள்ளவர்கள் என்றுகூறி இதுவரை 8000 பேருக்கு மேல் கைது செய்து அடைத்துள்ளார். அதில் 95 விழுக்காடு இஸ்லாமியர்களும், பட்டிய லின மக்களும் தான். ஆனால் படுகொலை செய்த வர்கள் கடும் குற்றங்களை செய்தவர்கள் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதில்லை. காரணம் அவர்கள் பாஜகவினர். இதுதான் மோடி கும்பலின் நியாயமான(!?) அரசியல். அடப்பாவிகளே! பில்கிஸ் பானுவை பாலியல் பலாத்காரம் செய்து அவரது 2 வயது குழந்தையை யும் சுவறில் அடித்துக் கொன்ற கொடுமையாளர்க ளை முன்கூட்டியே விடுதலை செய்து அவர்க ளுக்கு மாலை அணிவித்து வரவேற்புக் கொடுத்த பாஜகவின் அமித்ஷா தானே இந்நாட்டு உள்துறை அமைச்சர். அவர்களிடம் என்ன நியாயத்தை நாம் எதிர்பார்க்க முடியும். அப்படி விடுதலையான வர்களை உச்ச நீதிமன்றம் தலையிட்டு மீண்டும் சிறைக்குள் தள்ளியுள்ளது.

பாஜக மற்றும் இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தியா வில் வாழ தகுதியுள்ளவர்கள் என்று அறிவித்தா லும் ஆச்சரியமில்லை. உச்சநீதிமன்ற நீதிபதி மாண்புமிகு சந்திரசூட் நியாயமாக தீர்ப்பு வழங்கு கிறார்; அவரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயைப் போல் மிரட்ட முடியாது என்று, அவர் வீட்டில் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அழைக்காமலே பிரதமர் மோடி சென்று  பூஜை செய்கிறார். இதை ஒரு பிரதமர் செய்யலாமா? சரி பூஜை தான் செய்தார். அத்தோடு விட்டாரா அதை வீடியோ எடுத்து வெளியுலகத்திற்கு தெரிய பரப்பினார். ஏன் இந்த சின்னப் புத்தி? நீதிபதி சந்திரசூட் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார் பிரதமர் மோடி.

என்கவுண்ட்டர் பாஜக ஆட்சி

ஏன் இதனைக் குறிப்பிடுகிறோமென்றால் சிறுபான்மை மக்கள், பட்டியலின மக்கள்  குற்றவா ளிகள் என்று கூறி உ.பியில் மட்டும் 700 பேரை என்கவுண்ட்டர் செய்து கொன்றுள்ளனர். இது பாஜக ஆட்சியில் தான் நடந்துள்ளது. இப்படிப்பட்ட பிரதமர் மோடி தான் இஸ்ரேல் - பாலஸ்தீனம் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த வேண்டுமாம், அமெரிக்கா கூறுகிறது. பாலஸ்தீனர்கள் இஸ்லாமியர்கள் என்பதற்காகத் தான் இஸ்ரேல் அவர்களை கொல்வதை மோடி அரசு மகிழ்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேலுக்கு இந்தியா ஆயிரக்கணக்கான இளைஞர்களை இடிந்து கிடக்கும் கட்டிடங்களின் கட்டுமானப் பணிக்கு அனுப்ப உள்ளது. ஆயு தங்கள், ஏவுகணைகள், வாகன உபகரணங்க ளையும் அனுப்பியுள்ளது. கடந்த 15 மாதங்களாக மணிப்பூர் மாநி லத்தில் இனப்படுகொலை நடந்து வருகிறது. அந்த மாநிலத்திற்கு சென்று இதுவரை மோடி பார்க்க வில்லை. நாளுக்குநாள் கலவரமும் மோதலும் அதிகரித்து வருகிறது. அதை ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகளால் கட்டுப்படுத்த முடிய வில்லை. இந்த மோடியால் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரையும், ரஷ்யா - உக்ரைன் போரையும் எப்படி நிறுத்த முடியும்? உள்ளூரிலேயே கரப்பான் பூச்சி யை கண்டுபிடித்து அடக்க முடியாதவர் அயல் நாட்டில் போய் எப்படி காண்டா மிருகத்தை அடக்கு வார்? இது ஜோ பைடன் மற்றும் மோடி சேர்ந்து நடத்தும் நாடகம்.

ஐநாவில் பாலஸ்தீனத்தை ஆதரிக்காத இந்தியா

ஐ.நாவில் சில நாட்களுக்கு முன்பு பாலஸ்தீ னம் கொண்டு வந்த, ஓராண்டுக்குள் இஸ்ரேல், காசா மற்றும் பாலஸ்தீனத்திலிருந்து வெளி யேற வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்கவில்லை. அமெரிக்கா உட்பட 14 நாடுகள் அதை எதிர்த்து வாக்களித்தன. 124 நாடுகள் ஆதரித்து வாக்களித்துள்ளன. உண்மை யிலேயே போரை நிறுத்த வேண்டுமென்று இந்தியா விரும்பினால் அதனை ஆதரித்துத் தானே வாக்களித்து இருக்க வேண்டும். இதேபோல் 2022 டிசம்பர் 31 -ல் ஐ.நாவில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திலும் இந்தியா ஆதரித்து வாக்களிக்கவில்லை. 2022லும் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் நடக்கக் கூடாது நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்தையும் இந்தியா ஆதரிக்கவில்லை. இப்படி ஒரு சார்பாக இருக்கும் இந்தியாவும் அமெரிக்காவும் தான் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று பேசுகின்றன. இதுவரை 15,000 மாணவர்கள், 750 பேராசிரியர்கள், 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகள், காசாவில் இருந்த மருத்துவமனைகள், ஆலயங்கள், நூலகங்கள் ஏன் ஐ.நா ஊழியர்கள் 152 பேர், ஐ.நா சம்பந்தப் பட்ட கட்டிடங்கள் 140க்கும் மேல் என காஸாவை முற்றிலும் அழித்துவிட்டது இஸ்ரேல். 1945இல் தொடங்கப்பட்ட ஐ.நா மீது இப்படிப்பட்ட பெரிய தாக்குதலை வேறு எந்த நாடும் நடத்தவில்லை. தற்போது போரை நிறுத்த போராடும் ஐ.நா செய லர் அன்டோனியோ குட்டெரெஸியை இஸ்ரே லுக்குள் நுழையக்கூடாது என்று இஸ்ரேல் அறி வித்துள்ளது. இதுவரை பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாணவச் செல்வங்கள், மருத்து வர்கள் என்று 45000 பேரை இஸ்ரேல் கொன்றுள் ளது. நிச்சயமாக உண்மையான கணக்கு இதை விட அதிகமாகத் தான் இருக்கும்.

தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு பேஜர்,  வாக்கிடாக்கிகளை வெடிக்கச் செய்து அதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினரை தாக்க லெபனான்  மீது விமானத் தாக்குதலில் நடத்தி ஒரே நாளில் 1900க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரே லும் அமெரிக்காவும் அறிவித்துள்ளது. லெபனான் மீது தரை வழித் தாக்குதலையும் இஸ்ரேல் அமெரிக்க உதவியுடன் தொடங்கி விட்டது. போப் ஆண்டவரே இஸ்ரேல் செய்யும் கொடூரத் தாக்குதலை கண்டித்ததோடு போரை உடனே நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளை மயான பூமியாக்க இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஐ.நாவிலேயே போரை நிறுத்த மாட்டோம் என்று திமிரோடு பேசி யுள்ளார். எனவே சீனா, ரஷ்யா மற்றும் அரபு நாடுகள் ஒன்று சேர்ந்து போரை நிறுத்தி அப்பாவி மக்களை காக்க வேண்டும். இல்லையேல் மூன்றாம் உலகப் போர் வருவதை யாராலும் தடுக்க முடியாது.