tamilnadu

img

டிரம்ப்பின் அறிவிப்பால் பதற்றமான இந்திய தம்பதிகள்

வாஷிங்டன், ஜன.24- அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கு வதற்கான காலக்கெடு முடியும் நாள் நெருங்கி வரும் நிலையில்  பல இந்தியத் தம்பதிகள் முன்னதாகவே அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பிறப்பின் அடிப்படையில் அமெ ரிக்க குடியுரிமை வழங்க டிரம்ப் பதவி யேற்ற உடன் தடை விதித்தார். இந்த  உத்தரவு பிப்ரவரி 19 முதல் அமலாக்க உள்ளது. அந்த தேதிக்குப் பிறகு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தை களுக்கு பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படாது.  இதன் காரணமாக குடியுரிமை கிடைக்காதே என பதற்றமடைந்த பல தம்பதிகள் இவ்வாறான அவசர முடி வை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.  ஒவ்வொரு நாளும் மருத்துவ மனைகளில் நூற்றுக்கணக்கான தம்பதிகள் குவிகின்றனர் எனவும் அறுவைச் சிகிச்சை மூலம் தங்கள் குழந்தைகளை எடுத்துக்கொடுங் கள். இல்லையென்றால் அவர்க ளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்காது என கெஞ்சுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான தம்பதிகள் 8 அல்லது 9 மாத கர்ப்பிணிகளாக உள்ளனர். அவர்களின் பிரசவ தேதி சில  வாரங்கள் உள்ள நிலையில்,  பிப்ரவரி 20 க்கு முன் குழந்தை யைப் பெற்றெடுக்க முயற்சி செய் கிறார்கள். குடியுரிமை பெறுவ தற்காக தம்பதிகள் எடுக்கும் இம் முடிவு தாய்க்கும், குழந்தைக்கும் எதிர்காலத்தில் பல்வேறு வகை யான மருத்துவப் பிரச்சனைகளை யும் குறைப் பிரசவ பாதிப்புகளையும் உருவாக்கும் என மகளிர் மருத்து வர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இம்முடிவு சுயநலமா னது, முட்டாள் தனமானது. இது தாய், சேய் உயிருக்கு ஆபத்தை விளை விக்கும். அமெரிக்க மோகத்தின் மற்றொரு வெளிப்பாடாக குடியுரி மைக்காக குறைப் பிரசவத்தை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டனர் எனவும் டிரம்ப்பின் இனவெறி அரசியல் அனைவரையும் குழப்பத்திலும் அச்சத்திலும் மரண பயத்திலும் தள்ளிவிட்டது எனவும் விமர்ச னங்கள் எழுந்துள்ளன.    ஜனாதிபதி டிரம்ப்பின் இந்த பிறப்பின் அடிப்படையிலான குடியு ரிமை மறுப்பு உத்தரவை எதிர்த்து பல அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு கள் தொடரப்பட்டுள்ளன. சியாட்டில் மாவட்ட நீதிமன்றம் டிரம்பின் இந்த புதிய ஆணையை அமல்படுத்து வதை நிறுத்தி வைக்க உத்தர விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனி னும் குடியுரிமை இல்லாத நபர்களை ஒவ்வொரு நாளும் டிரம்ப் நிர்வா கம் தொடர்ந்து வெளியேற்றி வரு கிறது.