tamilnadu

img

கோவில் யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதி

தூத்துக்குடி,நவ.24-  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் நவம்பர் 18 அன்று கோயில் யானை தெய்வானை அருகில் நின்றிருந்த யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோரை எதிர் பாராதவிதமாக யானை தாக்கியதில் இரு வரும் உயிரிழந்தனர். தமிழ்நாடு முதலமைச் சர், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை யும், ஆறுதலையும் தெரிவித்ததோடு, உயி ரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு முதல மைச்சரின் பொது நிவாரண நிதியிலி ருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கி டவும் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஞாயிற்றுக்கிழமை  திருச்செந்தூருக்கு சென்று திருக்கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த யானை பாகன் உதயகுமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ. 2 இலட்சம், திருக்கோயில் சார்பில் ரூ. 5 இலட்சம் மற்றும் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சார்பில் ரூ. 3 இலட்சம் என ஆக மொத்தம் ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையையும், அவரது உறவினர் சிசுபாலனின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ. 2 இலட்சம் மற்றும் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் சார்பில் ரூ. 3 இலட்சம் என ஆக மொத்தம் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையையும் வழங்கி, அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக அமைச்சர் கோயிலுக்கு சென்று யானை தெய்வானையை பார்வை யிட்டு, அதற்கு கரும்பு துண்டுகளை வழங்கி, யானையின் உடல்நலன் குறித்து மருத்துவர்களி டம் கேட்டறிந்தார். பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், உயிரிழந்த உதயகுமாரின் இரண்டு குழந்தைகளுக்கான கல்வி செலவினை மாவட்ட அமைச்சர்  அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள னர்.  இது போன்ற ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம் இனி நடக்க கூடாது. அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருக்கோயில் நிர்வாகமும், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ளும். வருங்காலங்களில் யானைகளுக்கு கூடுதல் இடம் தேவை என்றால் கூட அதையும் ஏற்படுத்தித்தர துறை தயாராக இருக்கின்றது என்றார்.  இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.