tamilnadu

img

ஒரே நாடு ஒரே தேர்தல் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் ஆயுதம்

மயிலாடுதுறை, அக்.22 - மயிலாடுதுறை காமராஜர் சாலை யில் (நீதிமன்ற சாலை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு  அலுவலகம் புதிய அலுவலகம் கட்டப் பட்டு (கோ.பாரதி மோகன் நினை வகம்) திங்களன்று மாலை திறப்பு விழா  நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து கச்சேரி சாலையில் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: “மார்க்சிஸ்ட் கட்சியின் பிரம் மாண்டமான அலுவலகங்கள் எதிரி களை எரிச்சலடைய செய்கிறது. மற்ற  அரசியல்வாதிகளெல்லாம் தங்கள் வீட்டை மாளிகைப் போல கட்டிக் கொள்வார்கள். ஆனால் கம்யூனிஸ்ட்டு கள்தான் தங்களது கட்சி அலுவல கத்தை பிரம்மாண்டமாக கட்டிக் கொள்வார்கள். தற்போது மயிலாடு துறையில் தோழர்கள் வியர்வை சிந்தி உழைப்பாளி மக்களின் உதவி யால் புதிய அலுவலகத்தை கட்டியுள்ள னர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். மூன்றாவது முறையாக பெரும் பான்மை பெறாமல் கூட்டணிக் கட்சிகள் உதவியுடன் ஆட்சி அமைத்தாலும் பாஜக இந்துத்துவா மற்றும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கொள்கைகளை நடைமுறைப்படுத்து வதில் தயக்கம் காட்டுவதில்லை. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதிலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்க ளின் உரிமைகளை பறிக்கின்ற வகை யிலும் பாஜக தொடர்ந்து செயல்பட்டு  வருகிறது. ஆனால் நாடாளுமன்றத் தில் இந்தியா கூட்டணி பலமான கூட்டணியாக உருவாகியிருக்கிறது.  மோடி அரசு கொண்டு வரக்கூடிய சீரழிவு கொள்கைகளை பலமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒரே நாடு, ஒரே  மொழி, ஒரே கலாச்சாரம் என்பதை அமல்படுத்த பல்வேறு மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள் என்று இருக்கக் கூடிய இந்தியாவின் பன்முகத் தன்மையை நிராகரித்து, இந்து ராஷ்டிரம் அமைக்க முற்படு கின்றனர். 

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது  நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்க ளின் உரிமைகளை பறிக்கக் கூடிய செயலாக இருக்கும். இந்துத்துவா கோட்பாட்டை நாடு முழுவதும் அமல் படுத்தும் நோக்கத்தோடு இதனை அறிவித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது என்பது அந்தந்த மாநில அரசுகளுக்குட்பட்டது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கா ளர் பட்டியல் மாநில அளவில் தயாரிக்கப் பட்ட நிலையில், அதனை ஒன்றிய அளவில் தயாரிக்கும் முடிவை முன் வைத்துள்ளனர். மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயல் இது. நாடாளுமன்ற ஜனநாயகம் ஆர்எஸ்எஸ், பாஜகவால் முற்றிலும் மாற்றியமைக்கப்படுகிறது. அம்பானி,  அதானி போன்ற பெரும் கார்ப்ப ரேட்டுகளுக்கு ஆதரவாக பொருளா தார கொள்கை உருவாக்கப்படுகிறது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பொது விநியோ கத் திட்டத்தில் உணவு மானியத்துக் கான தொகை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள், விவ சாயிகள் பாதிக்கப்படுவார்கள்.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட அதே ரூ.86 ஆயிரம் கோடி தொகை மட்டுமே  ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக வேலை வாய்ப்பின்மை இதனால் மேலும் அதிகரிக்கும். 

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை முற்றிலும் மாற்றி யமைத்துள்ளனர். பாரம்பரியமாக உலகமயமாக்கல், ஏகாதிபத்தியத் துக்கு எதிராக இருந்ததை மாற்றி மோடி அரசு கண்மூடித்தனமாக இஸ்ரேலை ஆதரிக்கிறது. பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றனர். ஐ.நா சபையில் இஸ்ரேலை கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மா னத்துக்கான வாக்கெடுப்பில் இந்தியா  பங்கேற்காமல் நடுநிலையாக இருந்தது  கேவலமானதும் வெட்கப்படத்தக்க ஒன்று. அமெரிக்கா எடுக்கும் முடிவை யொட்டியே இந்தியாவும் முடிவெ டுக்கும் நிலை உள்ளது. பாலஸ்தீனத் தில் நடைபெறும் இனப்படுகொலை களை தடுத்து நிறுத்த வேண்டும். இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பு வதை இந்தியா நிறுத்த வேண்டும்.  விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து இடது சாரி சக்திகளை பலமான அமைப் பாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பாஜக அரசின் ஜன நாயக விரோத கொள்கைகளுக்கு எதி ராக மக்களை அணி திரட்டி போராட வேண்டியுள்ளது. இடது சாரி சக்தி களை ஒருங்கிணைப்பது உள்ளிட்டவை  தொடர்பான கொள்கைகளை முன் வைத்து ஏப்ரலில் மதுரையில் அகில இந்திய மாநாடு நடைபெறவுள்ளது” என்றார்.

பிரகாஷ்காரத்தின் ஆங்கில உரையை மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.துரை ராஜ் தமிழில் மொழிபெயர்த்தார். பொதுக் கூட்டத்தில் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்மு கம், மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நட ராஜன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட  தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற  உறுப்பினருமான எஸ்.ராஜகுமார்,  தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பாரதிஅண்ணா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் உள்ளிட்டோர் உரையாற்றினர். திமுக நகர செயலாளரும், நகர மன்ற தலைவருமான குண்டாமணி செல்வராஜ் உள்ளிட்ட நகர திமுக நிர்வாகிகள், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ். துரைராஜ், ப.மாரியப்பன், ஏ.ரவிச்சந்தி ரன், ஜி.வெண்ணிலா, டி.சிம்சன், சி. விஜயகாந்த், கே.பி.மார்க்ஸ், ஒன்றிய  செயலாளர்கள் டி.ஜி.ரவி, டி.துரைக் கண்ணு (நகர செயலாளர்), கே. கேசவன், அசோகன் மற்றும் மாவட்டக் குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், வாலிபர், மாதர் சங்க நிர்வாகிகள், தொழிற் சங்கத்தினர் உட்பட ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

மூத்த தோழர்கள், புதிய அலுவலக கட்டிட கமிட்டியினருக்கு பாராட்டு

விழாவில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மாவட்டச் செய லாளராகவும், சட்டமன்ற உறுப்பினரா கவும், எளிய மக்களின் தலைவராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த  தலைவர்களில் ஒருவரான தோழர்.கோ.பாரதிமோகன் துணைவியார் குஞ்சிதம் பாரதிமோகன், ஒருங்கி ணைந்த தஞ்சை மாவட்டச் செய லாளராகவும், மக்கள் தலைவராக வும், கிராமப்புற மக்களின் தோழனாக,  ஆணவ அதிகாரிகளை நடுங்க வைத்த தோழர்.கே.ஆர்.ஞானசம்பந் தம் துணைவியார் கே.ஆர்.ஜி.வேத வள்ளி இருவருக்கும் தலைவர்கள் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.  தொடர்ந்து புதிய அலுவலகத்தை சிறப்பாக வடிவமைத்து கட்டிய கட்டிட  கமிட்டியின் தலைவர் டி.கணேசன், பொருளாளர் ஆர்.ராமானுஜம், செய லாளர் வ.பழனிவேலு, எம்.மணி, கட்டிட பொறியாளர் விவேகானந்தன் ஆகியோரை பாராட்டி, வாழ்த்தி நினைவு பரிசுகளை தலைவர்கள் வழங்கி கௌரவித்தனர். 

நூல் வெளியீடு

கூட்டத்தின் போது “உயரும் கொடிகள்” புத்தகத்தை மாநில செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் பெற்றுக்கொண்டார். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். துரைராஜ் நன்றி கூறினார்.  (ந.நி)